Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் 
பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History: 27 ஆம் இதழின் மற்ற கட்டுரைகள்

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History

வரலாற்று ஆய்வாளர்களாக ஆக விரும்புபவர்கள் கற்றுக்கொள்ளும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி!

Saturday, September 23, 2006

27 ஆம் இதழின் மற்ற கட்டுரைகள்

சென்ற இதழில் இடம்பெற்ற மா.இலாவண்யாவின் கல்வெட்டாய்வு கட்டுரையின் தொடர்ச்சி மகேந்திரரின் விருதுப்பெயர்கள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கற்கோயில்கள் எடுப்பிக்கப்பட்ட காலத்தில் குடைவரைகளை அமைத்த பல்லவர், பாண்டியர், சேரர், முத்தரையர் மற்றும் அதியர் ஆகியோரது படைப்புகள் எந்த விதத்தில் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன என்று சுருக்கமாக விளக்கியுள்ளார் முனைவர் மு.நளினி.

தென்னிந்தியாவின் முதல் கற்கோயிலான விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு இலக்ஷிதாயதனத்துக்குத் தன் பேரக்குழந்தைகளை அழைத்துச் சென்று விளக்கும் தமிழ்த்தாத்தாவின் மூலமாக ம.இராம்நாத்தின் வர்ணனைகள்.

தஞ்சை பெரியகோயில் உண்மையிலேயே பொன்னால் வேயப்பட்டிருந்ததா? திருவாரூர் மற்றும் திருவீழிமிழலையின் பொன் வேய்ந்த கல்வெட்டுக்களின் துணையுடனும் பழந்தமிழ் இலக்கியங்களின் துணையுடனும் தஞ்சைக் கல்வெட்டை ஆராயும் முனைவர் இரா.கலைக்கோவன் தன் தந்தையாரைப் பற்றி தீட்டிய சொல்லோவியத்தின் ஒரு பகுதி கலைக்கோவன் பக்கத்தில்.

வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும் உடையார்குடிக் கல்வெட்டின் இறுதிப்பகுதி விளக்கம் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் கைவண்ணத்தில்.

பெருவிருந்துக்குப் பின் தரப்படும் இனிப்பு/ஐஸ்கிரீம் போல கோகுலின் கதைகள். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத பைசாசமும் நிழலா நிஜமா என்ற பரம ரகசியத்தைத் தாங்கி வந்திருக்கும் கல்வெட்டு சொன்ன கதையும் உங்களுக்காக வெயிட்டிங்.

வேறென்ன வேண்டும்? படித்துவிட்டு வழக்கம்போல் பின்னூட்டம் வழியாக உங்கள் ஆதரவுதான்.

நன்றி.

இப்படிக்கு,
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்
வரலாறு.காம்

0 Comments:

Post a Comment

<< Home