Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் 
பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History

வரலாற்று ஆய்வாளர்களாக ஆக விரும்புபவர்கள் கற்றுக்கொள்ளும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி!

Sunday, March 11, 2012

எதுதான் தமிழ்ப்புத்தாண்டு?


வாசகர்களுக்கு வணக்கம்.

சென்ற மாதத் தலையங்கத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. 'தையோ, சித்திரையோ, புத்தாண்டைக் கொண்டாட விரும்புபவர்கள் அரசின் ஆணைக்காக இல்லாமல், அவரவர் மனசாட்சிப்படி எது சரியென்று படுகிறதோ, அதைக் கொண்டாடுவதுதான் சரி. அரசு ஆணையிட்டது என்பதற்காக ஒரு வருடம் யோசிக்காமல் தையில் கொண்டாடிவிட்டு, அடுத்த அரசு அதை மாற்றும்போது மீண்டும் யோசிக்காமல் சித்திரையில் கொண்டாடுவதுதான் தவறு' என்பதுதான் தலையங்கத்தின் உட்கருத்து. இதைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் எதிர்ப்பிற்கு இடமிருந்திருக்காது.

கடந்த இதழ் வெளியான பின்பு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எங்களிடமிருந்து உடனடி மறுமொழி வராததால் 'நாங்கள் கள்ள மௌனம் சாதித்ததாக'க் குற்றம் சாட்டினார்கள். அவர்களுக்கு, மாத இதழுக்கும் Blogக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறோம். வரலாறு.காம் என்பது குறிப்பிட்ட அளவு கட்டுரைகள் சேர்ந்த பிறகு ஏறத்தாழ ஒரு மாத கால இடைவெளியில் வெளியிடப்படும் மின்னிதழ்; தினந்தோறும் பதிவேற்றப்படும் வலைத்தளம் அல்ல. கட்டுரைகள் கிடைப்பதைப் பொறுத்து இந்த ஒரு மாதம் என்பது சற்று அதிகமாகவும் ஆகலாம். எனவே, இந்தத் தாமதத்திற்குப் பொருள், எங்கள் நிலையைத் தெளிவுபடுத்த எங்களால் முடியவில்லை என்பதன்று.

தமிழ்க்கடல் மறைமலையடிகள், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற ஆய்வுநெறி அறிந்த புலமைமிக்க அறிஞர்கள் ஒரு கருத்தை வலியுறுத்தி இருக்கும்போது நிச்சயம் அவர்கள் தகுந்த பின்புலம் இல்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. வரலாற்றை எழுதும்போது உணர்ச்சிவயப்படாமல் எழுதுவதே முறை. வரலாறு.காம் அதில் இயன்றவரை கவனமாகவே இருக்க முயல்கிறது என்றாலும், அதையும் மீறிச் சில சொற்கள் உணர்ச்சி மிகுதியாய் எப்போதேனும் வந்து விழுந்துவிடுகின்றன. அப்படி வந்து விழுந்த சொற்கள்தான் சென்ற தலையங்கத்தின் 'மானமும் அறிவும்' போன்றவை. அந்தச் சொற்களால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் பொறுத்தாற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

மறைமலை அடிகள் தலைமையில் புத்தாண்டு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் வெளிவந்த நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்களை மறைமலையடிகள் நூலகம், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற இடங்களில் கடந்த ஒருமாத காலமாகத் தேடிப்பார்த்தாலும், இதுபற்றிய செய்திகளை இதுவரை காணக்கூடவில்லை. எனவே, இன்னும் தேடல் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை கிடைக்காத நிலையில், எப்போது தமிழ்ப் புத்தாண்டு என்று நாமே மூலத்தரவுகளில் இருந்து ஆய்ந்தறிந்தால் என்ன என்ற எண்ணம் துளிர்விட்டது. தேடலின் முடிவில், சித்திரையில் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை; தையில் தமிழ்ப்புத்தாண்டு என்று சொல்வதற்கும் எந்தச் சான்றும் இல்லை என்பது தெளிவானது. அது மட்டுமல்ல, 'சங்ககாலத்தில் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடியதற்கே சான்றில்லை' என்றும் அறிந்தோம். சித்திரையில்தான் புத்தாண்டு என்று கூறுபவர்கள் வைக்கும் தரவுகளைச் சீர்துக்கிப் பார்த்தபோது கேள்விகளே மிஞ்சி நின்றன.

'சங்க இலக்கியங்களில் 'தைந்நீராடல்' எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வுதான் (உத்தராயனத் தொடக்கம்) புத்தாண்டு தொடங்குகிறது என்பதற்கு அறிகுறி என்று கூறுவதை மனதில் நிறுத்திக் கொள்வோம். தை முதல்தேதி அன்று நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்பு இல்லை. சரி. இந்த நிகழ்வு சித்திரை முதல்தேதி நிகழ்கிறது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் எவை?

'மகாபாரதம் நிகழ்ந்த காலமாகக் கருதப்படும் கி.மு. 1300ஆம் ஆண்டிலிருந்து, மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்ற கிறிஸ்து சகாப்தத் தொடக்க நூற்றாண்டு வரையிலும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

மகாபாரதத்தின் காலத்தை கி.மு 1300ம் ஆண்டு என்று கூறுவது எப்படி? தமிழ் ஹிந்து தளம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று கூறுகிறதே? (பார்க்க: http://www.tamilhindu.com/2009/08/kannan_for_all_time/) எது உண்மை?

'மேலை நாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது.'
'"உறையூர்ப் பங்குனி முயக்கம்" என்றும் "கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளிவிழவு" என்றும் குறிப்பிடப்படும் விழா, பங்குனி மாதப் பூர்ணிமை நாளான உத்தர பல்குன நட்சத்திரத்தன்று நடைபெற்ற ஹோலி விழாவே ஆகும். இவ்விழா பங்குனி மாத இறுதி நாளில் கொண்டாடப்பட்டது. வேனில் காலத்தை வரவேற்கின்ற விழாவாக இது அமைந்தது எனத் தெரிகின்றது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

மேலை நாடுகளில் சரி! உறைய வைக்காத குளிரைக்கொண்ட தமிழ்நாட்டில் வெயில் காலம் ஏன் வரவேற்கப்பட்டது? பங்குனி முயக்கமும் உள்ளிவிழவும் வடநாட்டுப் பண்டிகையான 'ஹோலி'யுடன் தொடர்புபடுத்தப்படுவது எதன் அடிப்படையில்? காமன் பண்டிகைக்கும் இந்திரவிழாவுக்கும் என்ன தொடர்பு? மேலும் இந்திரவிழாவுக்கும் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு? 'மீனமேஷம் பார்த்தல்' என்பதைச் சான்றாகக் கொள்ள வேண்டுமானால், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பேச்சு வழக்கையும் ஆதாரமாகக் கொள்ளலாமா?

'ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஆங்கிலேய சகாப்தம் - சொல்லப் போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

இது கட்டுரையாளருக்குத் 'தோன்றியிருக்கிறது'. அவ்வளவே. முடிந்த முடிவாகச் சொல்லவில்லை. நேரடியான ஆதாரங்களையும் காட்டவில்லை. சாந்திரமான மற்றும் சௌரமான முறைகளைக் குழப்பங்கள் என்று சொல்லிவிட்டு, கிரேக்க, ரோமானிய, ஜொராஸ்ட்ரியக் காலக்கணக்கீடுகளை இந்தியச் சோதிட அறிவியலின் (உண்மையிலேயே இது அறிவியலா என்பது வேறு விஷயம். பார்க்க : நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி முனைவர். வெங்கட்ராமன் அவர்களின் கூற்று. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=375826) சாந்திரமான முறையின் பூர்ணிமாந்தக் கணக்கீட்டுடன் இணைத்திருப்பது ஏன்? இது ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துவருகிற வகையில் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவா?

'பூர்ணிமாந்த முறை (பெளர்ணமியை ஒரு மாதத்தின் முடிவாகக் கொள்ளும் முறை)'
'இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது.'
'பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளை இக் கட்டுரையில் முன்னரே பரிசீலித்தோம். இச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

இந்திரவிழா தொடர்பான மேற்கண்ட மூன்று வரிகளையும் படிப்போர்க்குக் குழப்பமே மிஞ்சும். பூர்ணிமை (பௌர்ணமி) + அந்தம் = பௌர்ணமியுடன் ஒரு மாதம் முடிகிறது. இதை இரண்டாவது சொற்றொடருடன் பொருத்திப் பார்க்கும்போது இந்திரவிழா சித்திரை மாதத்தின் கடைசி நாளில் நடைபெற்றதாக வருகிறது. இதன்மூலம் மூன்றாவது வரியில் இந்திரனுக்கு ஆண்டின் தொடக்கக் காலத்தில் விழா எடுத்திருப்பதால் பூர்ணிமாந்த முறையில் சித்திரையின் கடைசி நாள்தான் ஆண்டின் தொடக்கமா?

'பூர்ணிமாந்தக் காலக்கணக்கீட்டின் படியமைந்த, மார்கழி மாத இறுதி நாளன்று அதாவது தை முதல் தேதிக்கு முந்தைய நாளான மார்கழிப் பெளர்ணமியன்று பாவை நோன்பின் இறுதி நாளாகக் கருதப்பட்டு பலராமன் வழிபாடும் நிகழ்ந்திருக்க வேண்டும்.'
'போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிரப் பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று.'
'மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.'
'பக்தி இயக்கக் காலகட்டத்தில் மார்கழி நோன்பின் இறுதி நாளன்று அல்லது நோன்பு முடிகின்ற நாளை அடுத்துப் பால் சோற்றுப் பொங்கல் சமைத்து அதில் நெய்யைப் பெய்து உண்டு களித்தனர்.'
'பூம்புகாரில் இந்திர விழாவின் போது "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து" மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64-69களில் குறிப்பிடப்படுகிறது. விழுக்குடை மடை என்பது 'மாமிசம் விரவின சோறு' என்றும் பொங்கல் என்பது 'கள்ளு' என்றும் உரையாசிரியர்கள் பொருள் கண்டுள்ளனர். எனவே தைப் பொங்கல் விழா என்ற பெயர்கூட மதுப் பொங்கல் தொடர்பானதே; விவசாயக் கடவுளான பலராமனுக்குரிய வழிபாட்டு விழாவே என்பதும் தெளிவாகும். போகியை மார்கழி மாத இறுதி நாளன்று தனி விழாவாகவும் பொங்கலைத் தை முதல் நாளன்று தனி விழாவாகவும் கொண்டாடுவது மட்டும்தான் இன்று நாம் காணும் வெளிப்படையான வேறுபாடே தவிர இவை இரண்டும் ஒரே விழாவாகவே இருந்துள்ளன என்பது தெளிவான உண்மையாகும்.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

போகிப்பண்டிகை என்பது பலராமனுக்கு உரியது. அது மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படுவது. பூம்புகாரில் இந்திரவிழாவின்போது (சித்திரை மாதக் கடைசிநாளில்) வைக்கப்பட்ட பொங்கலும் பலராமனுக்குரியதே. அப்படியெனில் இவை இரண்டும் எப்படி ஒரே விழாவாக இருந்திருக்க முடியும்? சிலப்பதிகாரக் காலத்தில் மார்கழிக்கு அடுத்துச் சித்திரை மாதம் வந்ததா? இரண்டு மாதங்களின் இறுதி நாட்கள் (பௌர்ணமிகள்) அடுத்தடுத்து வந்தனவா? அப்படியானால் சித்திரை மாதத்துக்கு ஒரே நாளா? மேலும், போகிப்பண்டிகை பலராமனுக்கு உரிய விழா என்பதற்கு என்ன சான்று?

'பிற்காலச் சோழராட்சியின் போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா என்ற கேள்விகள் தொடர்பான பிரச்சினையாகும். இவை இரண்டிற்குமே தெளிவான விடை "அல்ல" என்பதுதான்.'
'சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக் கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.'
'இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

கட்டுரையின் தொடக்கத்தில் 'புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்புச் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை' என்று குறிப்பிடுபவர், சோழர் காலக் கல்வெட்டு உத்தராயனத் துவக்கம் தை முதல்நாள் என்று குறிப்பிடும்போது அதை ஏன் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்?

'சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப்பார்க்கத் தக்கது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

சித்திரைப் புத்தாண்டையும் அப்பெருந்தகை முதன்மைப் படுத்தவில்லை என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டாமா?

'பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.
'கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில்-முதுவேனில், கார்-கூதிர், முன்பனி-பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

இந்த வரிசை தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் தரும் வரிசையுடன் பொருந்தவில்லையே?

'காரும் மாலையும் முல்லை
குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர்
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப
வைகறை விடியல் மருதம்
எற்பாடு, நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனிதானும் உரித்து என மொழிப
இரு வகைப் பிரிவும் நிலை பெறத் தோன்றலும்
உரியது ஆகும் என்மனார் புலவர்' - தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் – (6-13)

இதில் கார்காலம்தானே முதலாவதாகக் குறிக்கப்படுகிறது? இது தொல்தமிழ் மரபில்லையா?

'60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை "வியாழ வட்டம்" (Jovian Circle) எனப்படும்.'
'இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

பிறகு ஏன் ஒவ்வொரு சித்திரை முதல் தேதியிலும் ஒவ்வோர் ஆண்டு தொடங்குவதாகச் சோதிடம் கூறுகிறது? 1-1-2012 என்ற தேதிக்கும் 2012ம் ஆண்டுக்கும் எந்த அடிப்படைத் தொடர்பும் இல்லை என்று கூறுவதுபோல் இருக்கிறது.

'ஜோதிட அடிப்படையில் பார்க்கப்போனால் விஸ்வபுருஷனின் தலையாகக் கருதப்படும் மேஷ ராசியின் முதல் பாகையில் சூரியன் பிரவேசிக்கின்ற காலமே சித்திரை முதல் நாளாகும்.'
'"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்" என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் வரியாகும். மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள்.' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.

இப்பாடலுக்குப் 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி'யில் தமிழரின் வானியல் அறிவைக்கூறும் 'வானக்கலை' என்ற தலைப்பில் டாக்டர். மா.இராசமாணிக்கனார் எழுதிய விளக்கம் : 'சந்திரன் தக்கனுடைய புதல்வியர் இருபத்தெழுவரை மணந்தான்; அவர்களுள் உரோகிணியிடம் மிகுந்த அன்பு செலுத்தினான்' என்பது புராணக்கதை. பாண்டிமாதேவியின் கட்டிலின் மேற்கூரையில் இராசிமண்டலம் வரையப்பட்டிருந்தது. சந்திரன், உரோகிணி உருவங்களும் வரையப்பட்டிருந்தன. ஆகாயத்திடத்தே திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும் மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு திரியாமல் நின்ற உரோகிணி எழுதப்பட்டிருந்தது'.

இதில் புத்தாண்டு எங்கே வருகிறது?

மேடராசியைத் தலையாகக் கொண்டு சூரியன் சுற்றி வருவதாக இப்பாடல் கூறினாலும், சூரியனுக்கும் புத்தாண்டுக்கும் உள்ள தொடர்பை வகுத்தவர் யார்? சூரியன் ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் நுழைவதுதான் புத்தாண்டு என்று எப்படி எடுத்துக் கொள்வது? வானியல் என்பது வானில் உள்ள கோள்களின் இயக்கத்தை ஆராயும் இயல். மேற்கண்ட பாடல் தமிழர்களின் வானியல் அறிவுக்குச் சான்று. அவ்வளவே. அவ்வானவியல் கூறுகளின் பெயரால் பண்டிகைகளையும் பலன்களையும் கணிக்கும் சோதிடம் என்பது மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அறிவியல் விதிகளைப் போன்று சோதிட விதிகளைத் தெளிவாக வரையறை செய்து தொடர்ச்சியாக நிரூபிக்க முடியாது. வரலாற்று ஆய்வு என்று குறிப்பிடப்படும் ஒரு கட்டுரைக்கு அறிவியல் முறையில் நிரூபிக்க முடியாத சோதிடத்தை அடிப்படையாகக் கொள்வது ஆய்வுநெறியா?

மேட ராசி என்று நச்சினார்க்கினியர் போன்ற உரையாசிரியர்கள் குறிப்பிடுவதால் அது சித்திரைதான் என்கிறார்கள். உரையாசிரியர்கள் சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர். ஒருகாலத்தில் எழுதப்பட்ட ஒரு பாடலுக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து வந்தவர்கள் உரையெழுதியிருக்கிறார்கள். எனவே, பாடலை இயற்றியவர் சொல்ல விரும்பிய கருத்தைத்தான் உரையாசிரியர்களும் கூறியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. உரையாசிரியர்களின் கருத்துக்கள் இரண்டாம்நிலைத் தரவுகளே. மூலபாடம்தான் முதல்நிலைத் தரவாகக் கொள்ளத்தக்கது.

உரையாசிரியர்கள் அவரவர் காலத்தில் நிலவிவந்த நம்பிக்கைகளுக்கேற்பத் தற்குறிப்பேற்றியோ அல்லது நடுநிலையுடனோ பாடலுக்குப் பொருள் கண்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது. தமிழ் ஹிந்து தளத்தில் 'விய' ஆண்டுக்கு 'இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியையும்', கணியன் பூங்குன்றனாரின் பாடலுக்கு ஊழ்வினைக் கருத்தையும் தற்குறிப்பேற்றி இணைத்துப் பார்ப்பதையும் புராணம் தொடர்பான சங்க இலக்கியப் பாடலடிகளுக்கு அப்புராணங்களைக் காட்டியே பரிமேலழகர் போன்றவர்கள் நடுநிலையுடன் உரையெழுதியதையும் போல. எனவே, உரையாசிரியர்களின் கருத்தைச் சான்றாக முன்வைக்கும்போது மூலபாடத்திலுள்ள செய்யுள் அடிகளையும் சரிபார்ப்பது அவசியமாகிறது.

அந்த வகையில், நெடுநல்வாடைப் பாடலின் 'ஆடு தலையாக' என்ற சொல்லைப் பார்க்கும்போது உண்மையிலேயே 'மேடராசி முதல் இராசிதானா?' என்று ஐயம் எழுகின்றது. சூரியன் சுற்றுகிறது என்ற தொடரே அதன் பாதையை வட்டம் என்கிறது. வட்டத்திற்கு ஏது தலையும் வாலும்? அப்படியே ஏதாவதொரு புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும் என்றாலும் தலையாக என்பதை 'முதலாக' என்று ஏற்றுக் கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. உதாரணமாக, எங்கள் குழுவைக் குறிப்பிடும்போது, கோகுலை நன்கு அறிந்தவர்கள் 'கோகுல் முதலான வரலாறு.காம் உறுப்பினர்கள்' என்றும், லலிதாராமை நன்கு அறிந்தவர்கள் 'ராம் முதலான வரலாறு.காம் உறுப்பினர்கள்' என்றும் குறிப்பிடுவார்கள். நாங்கள் அனைவரும் சமம் எனும்போது, இங்குப் பயன்படுத்தப்படும் 'முதலான' என்ற சொல் அவரவர் பார்வையையே குறிக்கிறது.

அதுமட்டுமின்றி, பரிபாடல் 11ல் 'எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்' என்ற அடிகளில் எரி – கார்த்திகை, சடை – திருவாதிரை, வேழம் – பரணி 'முதலென' என்று வருவதால், முதல் நட்சத்திரம் அசுவினி என்றல்லாமல், 'கார்த்திகை' என்று கொள்ளலாமா? அல்லது இதை இன்னொரு விதமாகப் பார்க்கலாம். அடுத்த அடியில் 'தெருவிடைப் படுத்த' என்று வருவதால், 12 இராசிகளைக் கார்த்திகைக்குரிய இடபவீதி (கன்னி, துலாம், மீனம், மேடம்), திருவாதிரைக்குரிய மிதுனவீதி (விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்) மற்றும் பரணிக்குரிய மேடவீதி (இடபம், மிதுனம், கடகம், சிம்மம்) என்று பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் கூறும் வரிசையில் பார்த்தாலும் வீதிகளில் ரிஷபமும் இராசிகளில் (இடபவீதியின் முதல் இராசியான) கன்னியுமே முதலாக வருகின்றன. எனவே, நெடுநல்வாடையில் முதல் இராசியாக மேடராசிதான் குறிக்கப்படுகிறதா என்பது தெளிவாக இல்லை.

சோதிடத்தில் மட்டுமே மேட ராசியும் சித்திரையும் இணைத்துக் கூறப்படுகின்றன. எந்தவொரு சங்க இலக்கியத்திலும் அத்தகைய இணைப்பு இல்லை. தமிழ் ஹிந்து தளத்தில் வெளியாகி இருக்கும் 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1' என்னும் கட்டுரையின் இறுதியிலும் இதற்கு ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது.

'மாதம் என்னும் சொல்லே, மதி என்னும் சொல்லிலிருந்துதான் உண்டாயிற்று. எந்த நட்சத்திரத்தில் மதி, முழு மதியாகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதங்கள் சொல்லப்பட்டன. இந்த முறைக்கு சாந்திரமானம் (Lunar Calender) என்று பெயர். இந்தப் பெயர்கள் நாளடைவில் சூரிய மாதங்களுக்கும் சேர்த்து, தற்காலத்தில், சூரியமாதப் பெயர்களாகி விட்டன.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1'.

இது தவறு. இக்கட்டுரையை வாசிக்க நேர்ந்த 8-ஜனவரி-2012 அன்று பௌர்ணமி இருந்தது. மாதம் மார்கழி. இக்கட்டுரையின்படி பார்த்தால் அன்று மார்கழி என்று தமிழில் சொல்லப்படும் மிருகசீரிஷ நட்சத்திரம்தான் இருக்கவேண்டும். ஆனால் அன்று இருந்ததோ அதிகாலை 5:45 வரை திருவாதிரை நட்சத்திரமும், அதன் பின்னர் புனர்பூசமும். அதற்கு அடுத்த நாள் 9-ஜனவரி-2012 அன்று பௌர்ணமி பகல் 13:39 வரை இருக்க, புனர்பூசம் காலை 6:20 வரையும் அதன் பின்னர் பூசம் நட்சத்திரமும் இருந்தன.

'மார்கழி, திருவாதிரைப் பௌர்ணமியில் ஆரம்பிக்கும் இந்த நோன்பு தொடர்பாக' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

அடுத்த கட்டுரையிலேயே மார்கழிப் பௌர்ணமி ஏன் மிருகசீரிஷத்தில் வராமல் திருவாதிரையில் வருகிறது?

'12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும்' - திரு. எஸ். இராமச்சந்திரன் - 'சித்திரையில்தான் புத்தாண்டு'.
'வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சியின் பெயர்கள்'' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

இரண்டு கட்டுரைகளுக்கும் இடையே ஏன் இத்தனை முரண்பாடுகள்?

'சூரியன் சிம்ம ராசி ஏகினவுடன், பொதியில் முனிவனான அகத்தியன் (Canopus) சூரிய உதயத்திற்குமுன் எழும்போது (Heliacal rising), சைய மலையில் மழை பொழியும், என்கிறது பரிபாடல்- 11. இது மேற்குத் தொடர் மலை. இன்று அம்மலை நம் வசம் இல்லை. அங்கு மழை பெய்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. மூவேந்தர் ஆட்சி அஸ்தமித்த உடனேயே தமிழ் நிலமும் மாறிவிட்டது, மக்கள் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு இடைக் காட்டு சித்தர் போன்றவர்கள், சூரிய மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, 60 வருடப் பெயர்களையும் சூரிய வருடங்களுக்குக் கொடுத்திருப்பர்.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

பரிபாடல் 11ன் உரையைப் படித்த கட்டுரையாளர் பார்த்த நிலப்படத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையும் அதிலிருந்து உருவாகும் வைகை நதியும் தமிழ்நாட்டில் இல்லை போலிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்ததால் வைகையில் வெள்ளம் பெருகிக் கரையை உடைத்தது என்பதுதான் பரிபாடல் 11ம் பாடலின் 1 முதல் 15 வரையிலான அடிகள் உணர்த்தும் செய்தி. மூவேந்தர் ஆட்சி முடிந்த பிறகு வைகைக்கு நீர் எங்கிருந்து வருகிறது? அகத்தியன் சூரிய உதயத்திற்கு முன் எழுவதெல்லாம் இப்பாடலில் இல்லவே இல்லை. Heliacal rising என்பதற்கு Dictionary.com தரும் பொருள்: 'the rising of a celestial object at approximately the same time as the rising of the sun' என்பது. 'அகத்தியன் பெயர்கொண்ட விண்மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்தியது' என்பதுதான் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின் முதற்பேராசிரியராகவும் பின்னர் துறைத்தலைவராகவும் திகழ்ந்த திரு. இரா. சாரங்கபாணி அவர்கள் எழுதிய உரை. 'பொதியில் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய' என்ற மூலபாடமும் இக்கருத்துடன் பொருந்தி வருகிறது. பல்வேறு பெயர்களையும் மேற்கோள்களையும் கட்டுரை முழுவதும் தந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குள்ள தொடர்பு முறையாக விளக்கப்படவேண்டும். அவ்விளக்கம் படிப்போருக்குச் சிந்தனைத் தொடர்ச்சியைத் தரவேண்டும்.

'பரிபாடல் 11-இல் கார் காலத்தில் வரும் முதல் மழை, சரியான சமயத்தில்தான் வந்துள்ளதா என்று சொல்லிவிட்டுத்தான், புலவர், அந்த மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கும் பாவை நோன்பு பற்றி விவரிக்கின்றார்.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

இது பரிபாடல் 11ம் பாடலின் தவறான புரிதல் அல்லது தற்குறிப்பேற்றல். 'சைய மலையில் மழை பொழிந்ததால் வைகையில் வெள்ளம் பெருகி அதன் கரையைத் தாக்கி அழித்தது' என்பதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மழை சரியான சமயத்தில் வந்ததா, தவறான நேரத்தில் வந்ததா என்பதெல்லாம் கட்டுரையாளரின் தற்குறிப்பேற்றம். இந்தப் பாடலின் 77ம் அடியில்தான் மார்கழிப் பௌர்ணமி திருவாதிரையில் வந்ததாகக் கூறப்படுகிறது.

'மார்கழி விடியலுக்குமுன், காற்று மண்டலத்தில் மக்கள் வெளியில் செல்வதால் உண்டாகும் சலசலப்பும், சில்லிடும் ஆற்று நீரில் குளிப்பதால் ஆற்று நீரில் ஏற்படும் சலனங்களும், மணலில் பாவைகள் செய்து உற்சாகக் கூக்குரலிடும் சிறுமியர் எழுப்பும் சப்தமும், ஆற்றங்கரையில், ஹோமத் தீ வளர்த்து உண்டாக்கும் வெம்மையும், தெய்வம் தொழும் போது எழுப்பும் ஒலி அலைகளும், என்றைக்கெல்லாம் அவ்வாறு செய்யபட்டனவோ, அன்றிலிருந்து, 195 – ஆம் நாள் மழை பெய்வதை உறுதி செய்யும் என்பது சோதிட விதி. இது தவறுவதில்லை.'
'காலம் சுழன்றாலும், இந்த மார்கழி குறித்த – மழை வரச் செய்யக் கூடிய – விடியலுக்குமுன் செய்ய வேண்டிய சலசலப்புகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.'
'தற்காலத்தில், ஐயப்ப பக்தர்கள் அந்த உத்தம நன்மையைச் செய்கிறார்கள். விடியலுக்கு முன், அவர்கள் கோவிலுக்குச் செல்லுதலும், பஜனை பாடுதலும், முற்காலத்தில் பாவை நோன்பின் போது சுற்றுப்புற சூழலில் உண்டாக்கப்பட்ட சலசலப்பிற்கு ஒப்பானது.' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 2'.

அப்படியானால் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் மழை பொய்த்துப் பஞ்சம் ஏற்பட்டபோது சோதிடவிதி தவறியது எதனால்? அப்பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் இத்தகைய சலசலப்புகள் நிகழவில்லையா? சிரபுஞ்சியில் இச்சலசலப்புகள் அதிக அளவில் நிகழ்வதற்கும் கவுகாத்தியில் குறைவாக நிகழ்வதற்கும் சான்றுகள் உள்ளனவா? அல்லது இச்சோதிடவிதி மூவேந்தர் ஆட்சிக்குப் பிந்தைய தமிழ்நாட்டுக்கு மட்டும் எழுதப்பட்டதா?

'வருடை என்னும் ஆட்டுக்கு நம் முன்னோர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு 'வான வரம்பன்' என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனே சாட்சி.'
'கோட்படுதல் என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆட்டைப் பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர்.'
'இமயத்தை எட்டிய இவன் முன்னோன் 'இமய வரம்பன்' என்று பெயர் பெற்றான். இவன் சென்றது தண்டகாரண்யம் என்றாலும், அங்கு சென்றதன் காரணமாக "வான வரம்பன்" என்று பெயர் பெற்றான் என்று பதிகம் கூறுவதால், அந்த வனத்தைக் கொண்டுள்ள விந்திய மலைச் சிகரத்தையே எட்டி உள்ளான் என்று தெரிகிறது. அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று ஆராய்ந்தால்- அவன் போரிடச் செல்லவில்லை. மலைச் சிகரங்களில் வாழும், வருடை என்னும் மலையாட்டைப் பிடித்துக் கொண்டு வரவேதான் அங்கு சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. எந்த அளவு வருடை ஆட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், சேர அரசன், தானே சென்று அதைப் பிடித்து வந்திருப்பான்? அதன் காரணமாக பட்டப் பெயரையும் பெற்றிருப்பான்?' - ஜெயஸ்ரீ சாரநாதன் - 'சித்திரையில் தொடங்கும் புதுவருடம் - 1'.

கோயிலூர் மடாலயத்தின் மூலமாக முனைவர் தமிழண்ணல் அவர்களும் முனைவர் சுப. அண்ணாமலை அவர்களும் பதிப்பித்த முனைவர் அ.மா. பரிமணம் அவர்கள் எழுதிய பதிற்றுப்பத்து உரையில், 'தண்டகாரண்யம் என்னும் நிலப்பகுதி ஆரிய நாட்டிலுள்ள ஒரு நாடு என்று பழைய உரையாசிரியர் குறிப்பர். இது, முன்னாள் பம்பாய் (மும்பை) மாகாணப் பகுதியில் இருந்தது என்று ஆய்வாளர் சுட்டுவர். பதிகத்தில் இடம்பெறும் "தண்டகாரனியத்துக் கோட்பட்ட வருடை" என்பது கொண்டு, "இச்சேரன் ஆடுகளைக் கவர்ந்து வந்தமையால், ஆடுகோட்பாட்டுச் சேரன் எனப்பட்டான்" என்று சிலர் விளக்குவர். "ஆடு" என்னும் சொல் அக்காலத்தில் வெற்றியைக் குறிக்கும் சொல்லாக விளங்கியதாலும், பண்டு "ஆடு" யாடு என்றே குறிப்பிடப்பட்டு வந்துள்ளமையாலும் "சேரன் போரில் வெற்றி கொள்வதனையே குறிக்கோளாக்க் கொண்டு செயல்பட்டவன்" என்னும் கருத்தில் இவ்வாறு கூறப்பட்டான் என்னும் ஆய்வாளர் கருத்தே ஏற்புடையதாகும்' என்று கூறியுள்ளார். ஆறாம் பத்தின் பதிகம் தவிரப் பிற பாடல்களில் இந்த 'ஆடு' சுட்டப்படாததால், மூலபாடத்தைச் சரிபார்த்தாலும் இக்கருத்தே பொருந்தி வருகிறது. மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் அறிஞர் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும் 'ஆடு' என்பதற்கு ஆடுதல், விலங்கு என்பன தவிர, கூர்மை, வெற்றி என்னும் பொருட்களையும் தருகின்றன. எனவே, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டகாரணியத்துக்குப் போரிடத்தான் சென்றான் என்பதும் தன் கொல்லைப்புறத்தில் கட்டிவைத்துக் கொள்வதற்காகத் தானே சென்று வருடையைக் கொண்டுவரவில்லை என்பதும் தெளிவாகிறது. வெற்றி பெற்றவர்கள் கவர்ந்து வரும் பெருமையைப் பெற்றதால் ஆடு முக்கியத்துவம் பெறுகிறது; அதனால் மேடராசியே தலையாயது என்று சொன்னால், ஆநிரை கவர்தலுக்கு இதைவிடப் பல நேரடிச் சான்றுகள் உள்ளன. அவற்றை முன்வைத்து, இடப ராசிதான் முதல் ராசி என்றும் வைகாசியில்தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும் சொல்லலாமா? மற்றபடி, 'நம் தமிழ் முன்னோருக்கு, இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள்' என்பனவெல்லாம் அனுமானங்களே அன்றி வேறன்று.

சித்திரையைப் புத்தாண்டாக நியாயப்படுத்துபவர்கள் அனைவரின் கட்டுரைகளிலும் இவைபோல் வலிந்து இழுத்து வளைத்து நிறுவ முயலும் தன்மையே விரவிக் கிடக்கிறது. எனவே, சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு என்ற முடிவை நம்மால் ஏற்க முடியவில்லை. இது போகக் கல்வெட்டு ஆதாரம் இருப்பதாகவும் தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'பத்தாம் நூற்றாண்டில் பிராமண, சத்திரிய, விஸ்வகர்மா மற்றும் சூத்திர வர்ணத்தைச் சார்ந்த 98 ஜாதியினர் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடியதாகக் கல்வெட்டு உள்ளதே' - பால கௌதமன் - 'திரிபே வரலாறாக'.

எந்தக் கோயிலின் எந்தப் பகுதியில் உள்ள கல்வெட்டு இதைக் கூறுகிறது என்று தெரிவிப்பதுடன் கல்வெட்டின் முழுப்பாடத்தையும் வெளியிட்டால் நன்றாகும்.

நாம் ஆராய்ந்தவரை கீழ்க்கண்ட தரவுகள் நமக்குப் புலப்படுகின்றன.

1. சங்க காலத்தில் தமிழன் புத்தாண்டு கொண்டாடியதற்குச் சான்றுகள் இல்லை.
2. இன்று வழக்கிலிருக்கும் 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லை.
3. சங்க இலக்கியங்களில் இந்த அறுபதில் எந்த ஆண்டின் பெயரும் தமிழ்ப்படுத்தப்பட்டோ அப்படியேவோ இடம்பெறவில்லை.
4. சிலப்பதிகாரத்தில்தான் முதன்முதலில் சித்திரை என்ற பெயரே வருகிறது. அதுவும் புத்தாண்டு குறித்த தரவுடன் அன்று.

இந்தத் தரவுகளின் அடிப்படையில் 'சித்திரையில் புத்தாண்டு' என்பது இடையில் வந்த வழக்கமேயன்றிப் பழங்காலத் தமிழர்களுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. தமிழ்மண்ணில் வடபுலத்தவர், இசுலாமியர், கிறித்தவர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அயலகச் சிந்தனைத் தாக்கங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

பி.டி.சீனிவாச ஐயங்காரும் தமது "History of the Tamils from the earliest times to 600 AD" என்னும் நூலில் இதே கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார்.

'வேத வேள்விகள், இதிகாச புராணச் செய்திகள் எல்லாம் மிக மிகச் சிறு அளவே சங்க நூல்களில் கூறப்படுகின்றன. அவற்றோடு வானியல் அறிவும் சோதிட மூடநம்பிக்கைகளும்கூட மெதுவாகத் தென்னிந்தியாவிற்குப் பரவின. திங்கள், ஞாயிறு, அவை விண்ணில் செல்லும் பாதையை 27 உடுக்களோடு இணைத்துக் கூறுதல் ஆகியவை மட்டுமே வேதங்கள் கூறுவது. கோள்கள் தன்மையும் வான்வெளியில் அவற்றின் பாதைகளும் பற்றிய அறிவு வேதங்களிலோ வேதாந்தங்களிலோ இல்லை. அவை பற்றிய அறிவும் அவற்றோடு பிணைந்த சோதிடக் கருத்துக்களும் காந்தாரம், சிந்துப் பகுதிகளில் யவன (இந்தோ கிரேக்கர்) அரசுகள் அமைந்த காலத்தில் அவர்களிடம் இருந்து கி.மு. 200 – கி.பி. 400 காலகட்டத்தில் வட இந்தியாவில் பரவின. பின்னர் கி.பி. 5ம் நூற்றாண்டில் தென் இந்தியாவிற்கும் பரவினதாகத் தோன்றுகிறது.' – பக். 215, 'தமிழர் வரலாறு – மூலம் : பி.டி.சீனிவாச ஐயங்கார் – தமிழாக்கம் : பி.இராமநாதன்'.

இவைபோன்ற சிந்தனை மாற்றங்களுள் ஒன்றுதான் சங்க இலக்கியத்தில் கொண்டாடப்படாத புத்தாண்டு பின்னாளில் சித்திரையில் கொண்டாடப்பட்டதும். ஆனால், நினைவு தெரிந்த நாள்முதலாய்ப் புத்தாண்டு கொண்டாடிப் பழகிவிட்ட இன்றைய தலைமுறைத் தமிழர்கள் ஒருவேளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட விரும்பினால் எப்போது கொண்டாடுவது பொருத்தம்?

சிந்தனைக் கலப்பு நிகழ்வதற்கு முன்னர் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் எந்த மாதம் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது?

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்" - நற்றிணை (80 மருதம் - பூதன்தேவனார்)

"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" - குறுந்தொகை (196. மருதம் - தோழி கூற்று)

"நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து" - ஐங்குறுநூறு (84, 9. புலவி விராய பத்து)

"வையெயிற் றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ" - கலித்தொகை (59, தளை நெகிழ்... எனத்தொடங்கும் பாடல்)

இன்று வாசிக்கக் கிடைக்கும் பழந்தமிழர்தம் இலக்கியங்களில் தமிழ் அறிஞர்களால் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நற்றிணையிலும் குறுந்தொகையிலும் ஐங்குறுநூற்றிலும் தை மாதத்தை மட்டுமே சிறப்பித்திருக்கிறார்கள்.

தைத்திங்கள் சங்க இலக்கியங்களில் இத்தனை இடங்களில் இடம்பெற்றிருக்க, சித்திரை முதன்முதலில் எங்கே வருகிறது என்று தெரியுமா? சிலம்பில் இந்திர விழவூரெடுத்த காதையில்தான். ஆகவே, தையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதே பொருத்தம் என்று உரைத்த தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் கா.நமச்சிவாயனார், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பி.டி. இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகிய அறிஞர்களின் முடிவு ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

இலக்கியங்களில் சிறப்பிக்கப்பட்டதால் மட்டுமே புத்தாண்டு என ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்பவர்கள் கல்வெட்டுச் சான்றையும் பார்க்கவேண்டும். சித்திரையில்தான் புத்தாண்டு என்பதை வலியுறுத்தும் தமிழ் ஹிந்து தளம் உட்படப் பல்வேறு இணைய தளங்கள் சான்றாகச் சுட்டும் ஆய்வாளர் திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்களின் கூற்றான 'புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்)' என்ற கருதுகோளின் அடிப்படையில் பார்த்தாலும், சங்ககாலத்தில் தை முதல்நாள் உத்தராயனத் தொடக்கமாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், பிற்காலச் சோழர் காலத்தில் தை முதல்நாள் அவ்வாறு கருதப்பட்டதற்குத் திருவலஞ்சுழிக் கல்வெட்டுகள் (முதலாம் இராஜராஜரின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு) கட்டியங் கூறுகின்றது என்று திரு. எஸ். இராமச்சந்திரனே ஒப்புக்கொள்கிறார். எனவே, உத்தராயனத் தொடக்கத்தை அடிப்படையாகக் கொள்ள விரும்புபவர்களும் தை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொள்ளலாம்.

அன்புடன்
ஆசிரியர் குழு

Labels: , , , , , ,

Sunday, August 19, 2007

தரிசனம் கிடைக்காதா!!!

வாசகர்களுக்கு வணக்கம்.

மூன்றாண்டுகளை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வரலாறு.காம் இதழை வாழ்த்திய வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி கலந்த வணக்கங்கள்.

ஒரு வாசகர் குறிப்பிட்டிருந்ததுபோல், தொடர்ந்து மூன்றாண்டுகளாக எந்தவித இலாபநோக்கும் இல்லாமல், ஒற்றுமையுடன் 570 கட்டுரைகளைப் படைத்திருப்பதை ஒரு சாதனை என்றே சொன்னாலும், இச்சாதனையைவிட அதிக மகிழ்ச்சியை எங்களுக்கு அளிக்கக்கூடியது, இக்கட்டுரைகளினால் தாங்கள் பயன் பெற்றோம்/பெறுகிறோம் என்ற வாசகர்களின் மடல்களே. அந்தவகையில், இம்மூன்றாம் ஆண்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் நீந்தவைத்தது என்றே சொல்லலாம்.

இதைவிடப் பேருவகையை அளித்த சம்பவம் ஒன்றும் இந்த மாத ஆரம்பத்தில் நடந்துள்ளது. மைசூரில் உறங்கிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை மீண்டும் தமிழகத்திற்குக் கொணரும் முயற்சி ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இதழில் குறிப்பிட்டிருந்ததைப்போல், மத்திய அரசின் கதவுகள் இப்பிரச்சினை கொண்டு தட்டப்பட்டிருக்கின்றன. அந்தக் கதவுகளும் உடனடியாகத் திறந்திருக்கின்றன. இப்பிரச்சினை தன் காதுக்கு எட்டிய உடனேயே மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் முறையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வைத்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இதை முதல்வர்வரை கொண்டுசென்ற நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கும் பேராசிரியர் அன்பழகனைச் சந்திக்கும் வாய்ப்பினை அமைத்துத் தந்த பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கும் இதற்காகப் பல ஆண்டுகளாகப் பல தளங்களின் வாயிலாகப் பாடுபட்டு வருபவரும் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றவருமான முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களுக்கும் இதன் முக்கியத்துவம் கேட்கப்பட்ட போதெல்லாம் சளைக்காமல் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் விளக்கிக்கூறிய முனைவர் சு.இராஜவேலு அவர்களுக்கும் வரலாறு.காம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் கல்வெட்டாய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரையில் இம்முயற்சி நன்றியுடன் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இம்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் அதேவேளையில், தாய்மொழிமீது பற்றுக்கொண்ட தமிழர்களின் நெஞ்சில் இன்னும் தணியாத ஏக்கமாக உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியும் வருத்தத்துடன் கூறவேண்டியிருக்கிறது.

திருநெல்வேலியிலிருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள ஆதிச்சநல்லூரில், அப்போதைய தொல்லியல்துறை அதிகாரியான முனைவர் தியாக.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட செய்தி 17-2-2005ம் தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் வெளியிடப்பட்டது. அந்தத் தாழியின் உட்பகுதியில் இருக்கும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியாத நிலையில், 'க ரி அ ர வ [ன] ட' என்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று புகைப்படத்தின்மீது கையால் எழுதப்பட்டுள்ளன. மைசூர் மத்திய தொல்லியல் துறை (ASI) இன் முன்னாள் இயக்குனரான முனைவர். M.D.சம்பத் அவர்கள் குத்துமதிப்பாகப் படித்ததாகவும், அதில் 7 எழுத்துக்கள் இருப்பதாகவும் அதே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'Preliminary thermo-luminescence dating என்ற முறைப்படி, இப்பானை கி.மு 500ஐச் சேர்ந்ததாகலாம். இருப்பினும், நம்பகமான முறையான Corban Dating தான் உறுதி செய்யவேண்டும்' என்று திரு.சத்தியமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்-பிராமி ஆய்வாளர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும், 'The claim on the date of the script and the assertion that it is in Tamil-Brahmi will be subjected to the scrutiny of scholars in the field.' என்ற வாசகத்தையே அழைப்பிதழாக ஏற்று, 'நம் தமிழ் எழுத்து' என்ற பேருள்ளத்துடன் அறிஞர்களும் இப்பானையை நேரில் கண்டு ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால், ஆய்வு செய்ய விழைந்த அறிஞர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆய்வு செய்ய அனுமதி கிடைக்காமை அவர்தம் நெஞ்சில் ஆறாத வடுவாக மாறியது.

22-9-2006ம் தேதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'Recent discoveries and their impact on south indian history' என்ற கருத்தரங்கில் 'பிராமி கல்வெட்டுகளின் தந்தை' என்று அழைக்கப்படும் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் திரு. நடன காசிநாதன் அவர்களும் தங்களுக்கு அனுமதி கிடைக்காமையை வெளிப்படையாகத் தெரிவித்தனர். தற்போதைய தொல்லியல்துறை அதிகாரி முனைவர் சத்தியபாமா அவர்கள், ஆதிச்சநல்லூர்ப் பானையின் உட்புறத்தில் எழுத்துக்கள் ஏதும் இல்லை என்று அறிவித்ததாகப் பின்னர் அதே கருத்தரங்கில் திரு. ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். முன்பு எழுத்து இருக்கிறது என்று சொன்னவர்களின் பக்கம் அறிஞர்களின் பார்வை திரும்பியபோது, Corban Dating க்காகப் பானை புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு கூடிய விரைவில் வரும் என்று பதிலளிக்கப்பட்டது.

பின்னர், கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, நெய்வேலியில் நடந்த 'தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்' என்ற கருத்தரங்கில் முனைவர் மார்க்சிய காந்தி அவர்கள் தாம் நேரடியாகச் சென்று தாழியைக் கண்டதாகவும், ஆனால் அதனுள் எழுத்துப்பொறிப்புகளோ, அதற்கான அடையாளங்களோ ஏதுமிருக்கவில்லை என்றும் அனைத்து அறிஞர்களின் முன்னிலையிலும் அறிவித்தார். அதே கருத்தரங்கில், தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனரான முனைவர். நடன காசிநாதன் அவர்கள், தமக்கு ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு, பானை காட்டப்படாததையும் தெரிவித்தார். அரசு இயந்திரங்களுக்கே உரித்தான உட்கட்சி அரசியல் தமிழின் பெருமையைப் பறைசாற்றும் தடயத்திலும் மூக்கை நுழைக்க வேண்டுமா என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கவலை. அதுமட்டுமல்ல. இந்த நிகழ்வுகள் தமிழின் தொன்மையால் பெருமை கொள்ளும் தமிழர்களின் மனதிலும் கீழ்க்கண்ட கேள்விகளை விதைத்திருக்கின்றன.

1. ஆதிச்சநல்லூரில் எழுத்துக்கள் உள்ள ஒரு பானை அகழ்ந்தெடுக்கப்பட்டதா?
2. எழுத்துப் பொறிப்புகள் இருந்திருந்தால், அதைப் பார்க்க ஏன் பிராமி அறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது?
3. பின்னர் எழுத்துக்களே இல்லை என்று அறிவிக்கப்பட்டது எதற்காக?
4. கண்டுபிடிக்கப்பட்டபோது எழுத்துப்பொறிப்புகள் இருந்திருந்தால், மார்க்சிய காந்தி பார்க்கும்போது காணாமல் போனது எப்படி? அல்லது, அவரிடம் காட்டப்பட்டது வேறொரு பானையா? ஏன் அவ்வாறு காட்டப்பட்டது?
5. முன்னர் எழுத்துக்கள் இருந்தன என்று சொன்னது உண்மையா அல்லது பின்னர் எழுத்துக்கள் இல்லை என்று சொன்னது உண்மையா?
6. கையில் இருக்கும் தடயத்தை வெளிப்படுத்த ஏன் இத்தனை தயக்கங்கள்?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழின் தொன்மையை உலகறிய விடாமல் செய்யும் தமிழின எதிரிகளின் மடத்தனமான சதித்திட்டமும் இதில் ஒளிந்திருக்கிறதா என்ற சந்தேகமும் அறிஞர்களின் மத்தியில் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இத்தனை கேள்விகளுக்கும் பதிலை எங்கே தேடுவது, யாரிடம் போய்க் கேட்பது? தன் தாய்மொழியின் பெருமையை அறிந்துகொள்ளக்கூட அருகதை இல்லாமல் போய்விட்டானா தமிழன்? தன் முன்னோர்கள் எழுதிய எழுத்தைக் காணும் பேறு கூடக் கிடைக்காததற்கு அவன் செய்த பாவம்தான் என்ன? கி.மு 500லேயே தமிழ் எழுத்துக்கள் சாதாரண மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து நடைபோட்ட தமிழனுக்குத் தான் தாய்மொழிமீது வைத்த பற்றிற்காகக் கிடைக்கும் பரிசு, 'பொய்யான வீண்பெருமை' என்ற மற்ற மொழி, இனத்தவரின் நகையாடல்தானா? இந்த எழுத்துக்கள் ஆய்வுலக வெளிச்சம் காண்பது எப்போது? ஒவ்வொரு தமிழனும் அதைப்பார்த்துப் பெருமைப்படுவது என்றைக்கு? எழுத்துக்கள் இருந்தனவா அல்லது இல்லையா? எது உண்மை?

அன்புடன்
ஆசிரியர் குழு

Tuesday, March 20, 2007

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

அன்பார்ந்த நேயர்களே!

தமிழனின் வரலாற்றை எழுத நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை என்று திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் கேள்விக்குப் பதிலளித்த திரு.மதன் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் இது. இதுபோல் எண்ணிக் கொண்டிருக்கும் மற்ற பல தமிழர்களும் உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாக இங்கே வெளியிடுகிறோம்.

கேள்வி

வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.

'வந்தார்கள்... வென்றார்கள்' என்ற தலைப்பில், மயிலாசனப் பேரரசர்கள் பற்றிச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால், பெரும் பங்களிப்பாக இருக்குமே?!

பதில்

கி.மு.44ல் கொல்லப்பட்ட ஜூலியஸ் சீசர், தன் படையெடுப்புகளை நுணுக்கமாக விவரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் (ஏழு வால்யூம்கள்). ரோம், கிரேக்க வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அற்புதமான புத்தகம் (3 வால்யூம்கள்) எழுதியிருக்கிறார் ப்ளூடார்க். பாபர், 'பாபர்நாமா' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றில், இந்திய வெயில், மாம்பழங்கள் பற்றி யெல்லாம்கூட விவரித்திருக்கிறார். ஜஹாங்கீர் தினமும் என்னென்ன டிபன் சாப்பிட்டார் என்பது பற்றிய குறிப்புகள்கூட உண்டு! ஆனால்...

தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும், கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை. புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும், பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு... உணர்ச்சிவசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள். 'வெற்றி பெற நாடுகள் இல்லாமல், தோள்கள் தினவெடுக்க, வாளை உருவியவாறு கரிகாலன் இமயமலை வரை ஆட்கொள்ளக் கிளம்ப... இமயம், கடவுள்கள் வசிக்கும் மலை என்பதால், அதைக் கரிகாலனால் தாண்ட முடியவில்லை. எனவே, இமயமலை மீது மிகப் பெரிய புலிச் சின்னத்தைச் செதுக்கிவிட்டுத் திரும்பினார் அந்த மாவீரன்!' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல் மிகையாகப் புகழ்கிறது! உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை! தெருவில் நின்ற கரிகாலனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து முடி சூட்டியதும், சிறையிலிருந்து தப்பித்தபோது கரிகாலனின் கால்கள் தீயால் பொசுங்கிக் 'கரிகாலன்' என்று பெயர் வந்ததும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாத வெறும் கற்பனையே! இதற்கெல்லாம் காரணம்... தமிழ்நாட்டில் முதலில் கவிதைகள்தான் தோன்றின! உரைநடை (Prose) எழுதப்பட்டது பிற்பாடுதான்!

நிலைமை இப்படியிருக்க, எந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் நம் வரலாற்றை எழுத முடியும்? கற்பனை கலந்த நாவல் (பொன்னியின் செல்வன் மாதிரி) வேண்டுமானால் எழுதலாம்!

கடிதம்

திரு. 'ஹாய்' மதன் அவர்களுக்கு,

வணக்கம்.

7-3-07 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் 'ஹாய் மதன்' பகுதியில் திரு. வெ.இறையன்பு அவர்கள் கேட்டிருந்த கேள்விக்குத் தாங்கள் பதிலளித்திருந்த விதம் எங்களை மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. 'வந்தார்கள் வென்றார்கள்' நூலைப் படித்துவிட்டுச் சரித்திரத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களை நாங்கள் அறிவோம். அதைப் படித்த ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் தோன்றிய கேள்விதான் திரு. இறையன்பு அவர்களின் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக வரலாற்றின்மீது ஈடுபாடு கொண்டிருக்கும் அவருக்கும் இதே அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறோம். அப்புத்தகத்தின் இறுதியில் தாங்கள் கொடுத்திருந்த துணைநூல் பட்டியல் தங்களின் உழைப்பைப் பறைசாற்றியது. அதைப் பார்த்துப் பிரமித்துப்போன ஒவ்வொரு வாசகனும் தங்களை ஓர் உயர்ந்த அறிஞரின் நிலையில் வைத்துத் தத்தம் ஐயங்களைப் போக்கிக் கொள்ளத் தங்களை நாடுகிறான். அப்படிப்பட்ட தங்களின் தமிழக வரலாறு பற்றிய சிந்தனை இப்படிப்பட்டதாக இருக்குமென்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. சங்க இலக்கியங்கள் வெறும் பாராட்டுப் பத்திரங்கள் என்ற தவறான கருத்து பல தமிழர்களின் உள்ளங்களில் பதிந்து கிடக்கிறது. தமிழக வரலாற்றைப் பற்றித் தமிழர்களே இத்தகைய மதிப்பீடுகள் கொண்டிருந்தால், புரிந்து கொள்ளவே மறுக்கும் வட இந்திய மற்றும் அண்டை மாநில ஆய்வாளர்களை என்ன சொல்வது? தாங்கள் கூறிய பதிலை வேறொரு சாதாரண மனிதன் கூறியிருந்தால், அதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், தாங்கள் கூறுபவை அனைத்தும் உண்மையென்றும், முறையாக ஆராய்ந்த பிறகே கூறுகிறீர்கள் என்றும் நம்பும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்குத் தவறான தகவல் சென்று சேரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் விளைந்ததுதான் இக்கடிதம். இதை எந்த வகையில் புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பது தங்களைப் பொறுத்தது. சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை.

தமிழ் இலக்கியங்களில் கற்பனையோ மிகைப்படுத்தப்பட்ட செய்திகளோ இல்லவே இல்லை என்பதல்ல எங்கள் வாதம். சற்று ஆழ்ந்து வாசித்தால் கற்பனைகளை எளிதாக இனங்கண்டு விடலாமே என்பதுதான் எங்கள் ஆதங்கம். மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகள் தந்ததென்னவோ உண்மைதான். ஆனால் நிறைய மது கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களே, அதற்கு என்ன ஆதாரம் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? பொருள் தரும் மன்னர்களைப் பாராட்டிப் பாட்டெழுதியதால் கற்பனை மிகுந்தது என்கிறீர்கள். அடையாளம் தெரியாத தலைவனையும் தலைவியையும் தோழியையும் வைத்து அகத்திணைப் பாடல்களைப் புனைந்த புலவர்களைப் புரந்தவர்கள் யார்? அவர்கள் அத்தகைய பாடல்களை இயற்ற வேண்டிய அவசியம் என்ன? தொல்காப்பியமும் திருக்குறளும், மதுவுக்கும் பொன்னுக்கும் மயங்குபவர்களால் எழுதிவிடக் கூடியவையா? சிலப்பதிகாரம் ஒரு குடிமக்கள் காப்பியம். மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதுடன் சுவைக்காக வேண்டிச் சில வர்ணனைகளும் கலந்தே இருக்கும். ஏதோ ஒன்றிரண்டு கற்பனைகளைக் காரணம் காட்டி அதைப் புறந்தள்ளிவிட்டால், அதுகூறும் ஆடற்கலை மற்றும் இசைக்கலை நுணுக்கங்களை ஆழ்ந்து அனுபவித்து மகிழ்வது எங்ஙனம்? அது வலியுறுத்தும் நீதிகளை மனதிற்கொண்டு வாழ்வைச் செம்மையுறச் செய்வது எவ்விதம்?

அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் எழுதி வைத்த நூல்களையும் குறிப்புகளையும் கொண்டுதான் வரலாற்றை அப்படியே எழுதவேண்டும் என்றால், ஆராய்ச்சி என்ற ஒரு துறை எதற்காக? பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தருபவருக்குப் பெயர்தான் வரலாற்றறிஞரா? ஜூலியஸ் சீசரும் ப்ளூடார்க்கும் பாபரும் ஜஹாங்கீரும் விட்டுச் சென்ற செய்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் நீலகண்ட சாஸ்திரியாரும் சதாசிவ பண்டாரத்தாரும் இன்னும் பிற அறிஞர்களும் தொகுத்து வைத்திருக்கும் சோழர் வரலாறு தாங்கள் அறியாததா? அவர்களையெல்லாம் அவமானப் படுத்துவது போலல்லவா அமைந்திருக்கிறது தங்கள் பதில்!! ஒரே இடத்தில் குவித்து வைக்கப்படாமல், பல்வேறு கோயில்களில் பரவலாகக் கல்வெட்டுகளாக வெட்டி வைத்திருப்பதாலும் அந்நியப் படையெடுப்பு மற்றும் திருப்பணிகளின்போது ஏற்பட்ட பாதிப்புகளாலும் சரித்திரச் சங்கிலியின் ஓரிரு கண்ணிகள் இன்னும் அகப்படாமல் போயிருக்கலாம். அதற்காகத் தமிழனுக்கு வரலாறே இல்லையென்ற முடிவுக்கு வருவது முறைதானா? வரலாறு இல்லாமல் வரலாற்றுக் கற்பனை நாவல் ஏது? கற்பனை செய்வதற்கும் ஏதாவது ஒரு Reference வேண்டுமே! கற்பனையில் உதித்த வேற்று கிரகவாசி என்றாலும், இரண்டு கை, இரண்டு கால்களுடனும்தானே கற்பனை செய்ய முடிகிறது?

தமிழக வரலாற்றைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும் மட்டுமே மிஞ்சியிருப்பதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். ஏன்? இந்த இரண்டும் போதாதா? இவற்றில் விடுபட்டவற்றை நிரப்பத்தான் செப்பேடுகளும் சாசனங்களும் இருக்கின்றனவே! அதற்கும் மேலாக, கட்டடக்கலையும் சிற்பக்கலையும் பழங்கால ஓவியங்களும் கண்ணிருப்பவர்களுக்குத் தருமே ஆயிரம் செய்திகளை! பெரும்பாலான கல்வெட்டுகள் நிவந்தங்களைப் பற்றியதாகவே இருந்தாலும், மண்ணிலிருந்து தங்கத்தையும் நிலக்கரியையும் பிரித்தெடுப்பது போல் தமிழக வரலாற்றைக் கவனமுடன் வடித்தெடுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுடன் தங்களுக்கு நிச்சயம் தொடர்பிருக்கும். அவர்களெல்லாம் இல்லாத ஒன்றைத் தேடி வெட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? சங்கப்பாடல்களும் கல்வெட்டுகளும் பொய்யுரைப்பவையெனில், 'உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை!' என்ற தங்களின் கூற்று எந்த விதத்தில் மெய்? எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு இதை எழுதினீர்கள்? இமயத்திலிருக்கும் Chola pass என்ற இடத்திற்குத் தாங்கள் தரும் விளக்கம் என்ன?

சங்க இலக்கியங்களில் வரலாறு இல்லை என்கிறீர்களே! இதோ எடுத்துக்காட்டுகிறோம் இரண்டு அகநானூற்றுப் பாடல்களை!

அகநானூறு - 126ம் பாடல் - தலைமகன் கூற்று - நக்கீரர் இயற்றியது - மருதத்திணை

நினவாய் செத்து நீ பல உள்ளிப்,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாள் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகித்,
திதியனொடு பொருத அன்னி போல

விளிகுவை கொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ்வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?

அகநானூறு - 145ம் பாடல் - செவிலித்தாய் கூற்று - கயமனார் இயற்றியது - பாலைத்திணை

வேர் முழுது உலறி நின்ற புழல்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,

கடு நவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது,
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!

'கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று' (பொருள் : கடலைவிடப் பெரிதாகத் தோற்றமளிக்கும் காவிரி) , 'பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்' (பொருள் : ஊர்மக்கள் விலையாகத்தர முன்வந்த நெல்லைவிட அவர்கள் அணிந்திருக்கும் முத்துக்களின் அளவு விலை பெறும் அவள் வைத்துள்ள கோடுகளையுடைய வாளை மீன்) போன்ற வரிகள் பாரதத்தின் இன்றைய புவியியல் மற்றும் பொருளாதார நிலையை மனதில் கொண்டு விளங்கிக் கொள்ள முயன்றால், உயர்வு நவிற்சி அணியாகத் தோன்றலாம். ஆனால், 'அப்போவெல்லாம் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும்' என்ற நம் தாத்தா பாட்டிகளின் மொழியைக் கேட்கும் வாய்ப்பமைந்திருந்தால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காவிரியின் தீரம் என்னவென்று எளிதாகப் புலப்படுமே! அதற்குப் பின்னும் இதைக் கற்பனையென்று புறந்தள்ள மனம் வருமா? காவிரியின் பிரவாகத்தை வர்ணிக்கும் சங்கப்பாடல்கள் ஒன்றா, இரண்டா? அவையனைத்துமே கற்பனையில் உதித்தவையா?

முறத்தால் புலியை விரட்டியதையும், கால் பொசுங்கிக் 'கரிகாலன்' ஆனதையும் வேண்டுமானால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பாடல் வரிகளுக்குள் இலைமறை காயாகப் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களையும் நோக்க மறுத்தால், இழப்பு நமக்குத்தான். இரண்டு பாடல்களுக்கும் பொதுவாக இருக்கும் வரிகளை ஆராய்வோமா? 'அன்னிக்கும் திதியனுக்கும் போர் நடந்தது. நடந்த இடம் குறுக்கைப் பறந்தலை. திதியனின் காவல் மரமான புன்னையை வெட்டித் திதியனை அவமானப்படுத்த முயன்றார் அன்னி. வேண்டாம் எனத் தடுத்தார் எவ்வி. கேட்காமல் வெட்டி வீழ்த்தினார் அன்னி. அடுத்து நடந்த போரில் அன்னி கொல்லப்பட்டார்'. இரண்டு வெவ்வேறு புலவர்களால் வெவ்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்ட இரு பாடல்களில் ஒரே செய்தி நினைவு கூரப்படுகிறது. இது பரிசிலுக்காக மன்னரை வாழ்த்திப் பாடியதும் அன்று. அப்படியே பாடியிருந்தாலும் யார்தான் இதற்குப் பரிசளித்திருப்பார்கள்? அன்னியா? திதியனா? எவ்வியா? பரிசளிக்கும் அளவிற்கு இதில் என்ன புகழ்ச்சி இருக்கிறது? இவையெதுவும் இல்லாத நிலையில், உண்மையாகவே அன்னிக்கும் திதியனுக்கும் போர் நடந்ததால்தானே இரண்டு புலவர்களும் ஒரே நிகழ்ச்சியைப் பாடியுள்ளனர்? அல்லது இருவருமே ESPயை வைத்துக் கனவு கண்டு பாடல்கள் புனைந்தனரா?

எங்கள் வரலாறு.காம் மின்னிதழ் 30 ஆம் இதழில் சங்கச்சாரல்-13 என்ற கட்டுரையில் இவ்விரண்டு பாடல்களும் கூறும் மற்ற கருத்துக்களையும் விரிவாக அலசியுள்ளோம். இது மட்டுமல்ல. சமீபத்தில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறைத் தலைவர் பேராசிரியர் திரு.கா.இராஜன் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வு செய்யப்பட்ட சங்ககால நடுகல் ஒன்றின் செய்தி சங்க இலக்கியங்களில் இருக்கும் குறிப்புகளுடன் பொருந்தி வந்ததும், அதன்பின் இலக்கியங்கள் குறிப்பிடும் 'எழுத்து' என்பது 'படங்கள்' அல்ல, தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களே என்று தங்களைப்போல் சங்க இலக்கியங்களைக் குறைத்து மதிப்பிட்ட பிற பேராசிரியர்கள் ஒப்புக்கொண்டதும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உண்மைகள்.

கல்வெட்டுகள் மட்டும் என்ன? அவையும் தகவல் சுரங்கங்களே என்று நிரூபிக்கக் கடலளவு ஆதாரங்கள் உள்ளன. இக்காலக் கோயில்களில் ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதன் ஒளியையே மறைக்கும் அளவுக்குத் தங்கள் பெயரை எழுதி வைத்துவிடும் மாக்களின் செயலுடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுக் கண்ணிருந்தும் குருடர்களாகின்றனர் சிலர். ஆனால், உண்மை அவ்வாறில்லை என்று மீண்டும் ஒருமுறை எங்கள் மின்னிதழின் 31 ஆம் இதழின் சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 2 என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளோம். பழுவூரை ஆண்ட பழுவேட்டரையர்களின் வரலாற்றை எப்படிக் கல்வெட்டுகள் நமக்குத் தருகின்றன என்று விளக்கும் அந்தக் கட்டுரையின் சுருக்கத்தை மீண்டும் இங்கே தங்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை :-



















எண்கல்வெட்டு இருக்குமிடம்கோயில் பெயர்சோழமன்னர்ஆட்சியாண்டுபழுவேட்டரையர்செய்திஆண்டறிக்கை எண்
1திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் ஆதித்தர்10குமரன் கண்டன்நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையதுSII Volume 5, No. 523
2மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் ஆதித்தர்12குமரன் கண்டன்'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார்SII Volume 3, No. 235
3திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் ஆதித்தர்19குமரன் மறவன்இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம்SII Volume 5, No. 537
4மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் ஆதித்தர்22குமரன் மறவன்இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார்SII Volume 8, No. 298, ARE 355 of 1924
5லால்குடிசப்தரிஷீசுவரர் கோயில்முதலாம் பராந்தகர்5குமரன் மறவன்'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறதுSII Volume 19, No. 146
6திருப்பழனம்மகாதேவர் கோயில்முதலாம் பராந்தகர்6குமரன் மறவன்குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறதுSII Volume 19, No. 172
7கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்முதலாம் பராந்தகர்12கண்டன் அமுதன்வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்திARE 231 of 1ட்926
8திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் பராந்தகர்14கண்டன் அமுதன்இது 'வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறதுSII Volume 5, No. 551
9மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்சுந்தரசோழர்5மறவன் கண்டன்இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறதுSII volume 5, No. 679
10கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்உத்தமச்சோழர்9மறவன் கண்டன்இவரது மறைவைத் தெரிவிக்கிறதுSII Volume 19, No. 237, 238
11உடையார்குடிஅனந்தீசுவரர் கோயில்உத்தமச்சோழர்12கண்டன் சத்ருபயங்கரன்இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான்SII Volume 19, No. 305
12கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்உத்தமச்சோழர்13கண்டன் சுந்தரசோழன்இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர்SII Volume 5, No. 681
13மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்உத்தமச்சோழர்15கண்டன் மறவன்நிவந்தம் அளித்ததுSII Volume 8, No. 201
14மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் இராஜராஜர்3கண்டன் மறவன்கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறதுSII Volume 5, No. 671
15மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் இராஜராஜர்15கண்டன் மறவன்இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவேARE 363 of 1924
16கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்முதலாம் இராஜேந்திரர்8யாருமில்லைபழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறதுSII Volume 5, No. 665


மேற்கண்ட 16 கல்வெட்டுகளும் நிவந்தங்கள் கொடையளிக்கப்பட்ட செய்தியையே தெரிவித்தாலும், 'இவ்வளவு பொன்னும் பொருளும் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு கல்வெட்டையும் அந்தந்த மன்னர் உடனிருந்து சரிபார்த்திருக்கவா போகிறார்?' என்று 23ம் புலிகேசியைப் போல் எல்லா மன்னர்களையும் எண்ணிக்கொள்ளும் சில அறியாப்பிள்ளைகளின் வாதத்திற்காகப் பொன்னையும் பொருளையும் விட்டு விட்டு, பழுவூரை ஆண்ட அரசர்களின் பெயர்களை மட்டும் சோழ மன்னர்களின் ஆட்சியாண்டுடன் ஒப்பிட்டுக் கீழ்க்கண்ட முடிவிற்கு வரலாம்.

1. கல்வெட்டுகளின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்ட பழுவேட்டரையர்களின் காலம் கி.பி 881 இல் இருந்து கி.பி 1020 வரை.

2. பழுவூரை ஆண்ட மன்னர்களின் வரிசைக்கிரமம் குமரன் கண்டன், குமரன் மறவன், கண்டன் அமுதன், மறவன் கண்டன், கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் என்பதாகும்.

3. இந்த வரிசையில் First name, Last name logic-ஐ வைத்துப் பார்த்தால், பழுவேட்டரையர்களின் தலைமுறையைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாமே!



வம்சாவளி மட்டுமா? பழுவூரின் அன்றைய பொருளாதாரநிலை, சமூக அமைப்பு, கோயில்களின் நிலை, விவசாயம் மற்றும் பாசனம் பற்றிய குறிப்புகள், கலை வளர்ந்த விதம், விளையாட்டுக்களிலும் வீரத்தைப் போற்றிய சூழல், அண்டை நாடுகளுடன் இருந்த தொடர்புகள், மற்ற அரசர்களுடனான திருமணத் தொடர்புகள், பங்கேற்ற போர்கள் போன்ற எண்ணற்ற விவரங்களை, திருச்சிராப்பள்ளி டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் முனைவர்.இரா.கலைக்கோவன் அவர்களால் எழுதப்பட்ட 'பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம்' என்ற நூலில் பெறலாம்.

கல்வெட்டுகளைப் படிப்பது என்பது எளிதான வேலை. கண்பார்வை நன்றாக இருக்கும் எவராலும் முடியக்கூடிய ஒன்று. ஆனால் அக்கல்வெட்டுகள் தரும் செய்திகளைத் தொகுத்து வகுத்து வரலாற்றை வடிப்பதென்பது, முன்முடிவுகள் ஏதுமின்றி, வரலாற்றைத் தத்தம் கொள்கைக்கேற்ப வளைக்க வேண்டும் என்ற கபடமின்றி அணுகும் ஆய்வாளர்களால் மட்டுமே முடியும். அதனால்தான் புகழ்விரும்பி ஆய்வாளர்களால் வெகுஜனப் பத்திரிகைகளில் தரப்படும் அரைகுறைச் செய்திகளைச் சாதாரண மக்களால் எளிதாகத் தவறென்று நிரூபித்து, 'வுடறார் பாரு கப்ஸா!' என்று எள்ளி நகையாட முடிகிறது. என்னதான் ஆய்வாளர்கள் பாடுபட்டு ஆராய்ந்து வரலாற்றுச் செய்திகளை வெளியிட்டாலும், அச்செய்திகள் மக்களைச் சென்றடைய வழிவகுப்பவை அச்செய்திகள் எழுதப்படும் எளிய, சுவையான நடையே. புளூடார்க்கும் பாபரும் விட்டுச்சென்ற குறிப்புகளை அப்படியே புத்தக வடிவில் தந்தால், எத்தனை இந்தியர்களால் அவற்றைப் புரிந்து, உணர்ந்து, அனுபவித்து, புளகாங்கிதமடைந்து மகிழ முடியும்? தங்களின் 'வந்தார்கள் வென்றார்கள்' மூலமாகவன்றோ அது சாத்தியமாயிற்று? முகலாயர்கள் வரலாறு தந்த அந்த இனிய அனுபவத்தை, அவர்களைவிடக் காலத்தால் மிகவும் முற்பட்ட, எதிரி நாடே ஆயினும் போர்களின் போது கலைச்செல்வங்களுக்குச் சிறிதும் சேதம் விளைவிக்காத, மிகச்சிறந்த கட்டடக்கலையையும் சிற்பக்கலையையும் நமக்குக் கொடையளித்துச் சென்ற சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாறும் தரவேண்டும் எனத் தமிழர்கள் எதிர்பார்ப்பது தவறா? எழுத்தாளர் சுஜாதா தங்கள் நூலின் முன்னுரையில் கூறியிருப்பதுபோல், கல்விநிலையங்களில் வரலாற்றுப்பாடம் தங்களின் நூல் அளவுக்குச் சுவையாகப் பயிற்றுவிக்கப் பட்டால், அனைத்து மாணாக்கர்களும் நூறு விழுக்காடு பெறுவார்களே! தொழிற்கல்வியில் இடங்கிடைக்க உதவாத பாடம் என்று புறக்கணிக்கப்படாமல், பெரும்பாலான மாணவர்களின் விருப்பப்பாடமாகத் தமிழக வரலாறு மாறுமே! செய்வீர்களா? எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.

Wednesday, January 24, 2007

31ம் இதழின் பிற கட்டுரைகள்

கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக இவ்வலைப்பூவைப் புதுப்பிக்க இயலவில்லை. இடையில் வெளிவந்த இதழ்களின் கட்டுரைகளை இணையத்தளத்தில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது நாங்கள் ஈடுபட்டுவரும் சீரிய பணியான ஐராவதியின் ஒரு பகுதியாக இந்த மாதம் இடம்பெற்றிருக்கும் திரு.ஐராவதம் மகாதேவனின் கட்டுரை சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம்.

25 ஆண்டுகளைக் கடந்து பல இளம் ஆய்வாளர்களை உருவாக்கி வரும் திருச்சிராப்பள்ளி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வரலாற்றைப் பதியும் முயற்சியில் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களின் மூன்றாவது அத்தியாயம்.

மூவேந்தர்களில் சோழர்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தாலும், மூவேந்தர்களின் கோயில்களுக்கும் வரலாறு.காம் குழுவினர் கடந்த மாதம் மேற்கொண்ட பயணத்தின் கட்டுரை.

முனைவர் இரா.கலைக்கோவனும் முனைவர் மு.நளினியும் தற்போது எழுதிவரும் பாண்டியர் குடைவரைகள் என்ற நூலுக்காக மேற்கொண்ட ஆய்வுப்பயணத்தின்போது இடம்பெற்ற அரளிப்பட்டி குடைவரையைப் பற்றிய அறிமுகம்.

பிசாசை முருங்கை மரத்தின் மீது ஏற விட்டுவிடாமல், அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தாலும், கதையைத் தொடரும் கோகுலின் பைசாசம்.

சங்க இலக்கியங்கள் கடந்த காலத்துடனும் (மாமல்லைச் சிற்பங்கள்) தொடர்புடையவை, நிகழ்காலத்துடனும் (குழந்தைப்பலி, கொடுவெறி இன்பம் - Sadism) தொடர்புடையவை என்பதை நிரூபிக்கும் சங்கச்சாரல்.

தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கியிருக்கும்
ஆசிரியர் குழு,
வரலாறு.காம்

தமிழிசை தழைக்க ...

வாசகர்களுக்கு வணக்கம்.

மாதங்களில் சிறந்த மார்கழி என்றதும் மனதில் தோன்றும் எண்ணங்களுள் ஒன்று 'இசை விழா'வைப் பற்றியதாக நிச்சயம் இருக்கும். உலகின் எந்த இடத்திலும் காண முடியாத படி, சென்னையில் ஐந்து கி.மீ பரப்பளவுக்குள், ஒரே நாளில் கிட்டத்தட்ட நூறு இடங்களில் இனிய இசை ஒலிப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் ஒலிக்கும் இசையைப் போலவே, வருடம் தவறாமல் டிசம்பர் மாதங்களில் நம் காதுகளில், தமிழிசையின் துயர் நிலையைப் பற்றிய செய்திகளும், தமிழ்ப் பாடல்கள் கச்சேரிகளில் அதிகம் ஒலிக்க வேண்டி கோரிக்கைகளும், ஒலிக்கத் தவறுவதே இல்லை.

இந்த வருடமும் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளின் தலையங்கங்கள் தமிழ் இசை வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தின. இவற்றைப் படிக்கும் போது, தமிழ்ப் பாடல்களின் வளர்ச்சி வெறும் இசைக் கலைஞர்களின் கையில் மட்டுமே இருப்பது போலவும், இசை ரசிகர்களுக்கோ, பத்திரிக்கைத்துறைக்கோ எந்தவிதப் பங்கும் இருக்க முடியாது என்பது போலவும் தோன்றுகிறது.

முதலில், உண்மை என்ன? தமிழ்ப் பாடல்களின் நிலை என்ன? அவை பாடப்படுவதில்லையா? இந்த மார்கழியில் கிட்டத்தட்ட முப்பது கச்சேரிகள் கேட்ட நிலையில், தமிழ்ப் பாடல்கள் கணிசமான அளவு பாடப்படுகின்றன என்றே தோன்றுகிறது. இன்றைய நிலையில், முதன்மைப் பாடகர் என்று கருதக் கூடிய நிலையில் உள்ள சஞ்சய் சுப்ரமணியம், ஒரு பேட்டியில், "நான் என் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல் பாடாமல் இருக்கவே மாட்டேன்", என்று கூறியுள்ளார். கூறியதோடு நில்லாமல், திருவருட்பா பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய கச்சேரியை, உலகத் தமிழர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு களித்திருப்பார்கள். அக்கச்சேரியைத் தவிர, அவரின் வேறு இரண்டு கச்சேரிகளை இந்த மார்கழியில் கேட்டோம். அவற்றுள் ஒன்றை 'தமிழிசைக் கச்சேரியாகவும்', மற்றொன்றில் கணிசமான அளவு தமிழ்ப் பாடல்களுடனும் பாடினார். இந்த ஆண்டும் தமிழிசைச் சங்கத்தில், முதன்மை ஸ்தானத்தில் இருக்கும் அனைத்துப் பாடகர்களும் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு கச்சேரிகள் செய்தனர். தமிழிசைச் சங்கத்தைத் தவிர, கார்த்திக் ·பைன் ஆர்ட்ஸிலும், தமிழிசை விழா நடந்தது. அவ்விழாவிலும், பிரபல பாடகர்கள் பலர் தமிழ்ப் பாடல்களை மட்டும் பாடி நிறைவான கச்சேரிகள் செய்தனர்.

இவற்றை நோக்கும் போது,

1. தமிழில் நல்ல பாடல்கள் உள்ளன!
2. தமிழ்ப் பாடல்கள் ஏனோ தானோ என்று துக்கடாவாகப் பாடும் நிலையில் நலிந்து காணப்படுவதில்லை!
3. நிறைவான கச்சேரிகள் பல செய்யக் கூடிய நிலையில் நிறைய பாடல்கள் உள்ளன!
4. அவை பாடகர்களிடையே புழக்கத்திலும் உள்ளன!

என்பவை தெளிவாகின்றன. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் முழுநேரத் தமிழ்க் கச்சேரி செய்ய முதன்மைப் பாடகர்கள் அனைவரும் தயாராக இருக்கும் பட்சத்தில், தமிழிசையை வளர்க்கும் பணியை யார் செய்வதில்லை? பாடகர்களா? அல்லது தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க நிறைய மேடைகள் ஏற்படுத்திக் கொடுக்காதவர்களா?

தமிழிசைக் கச்சேரிகளை நடத்திய இடங்களை மேலே குறிப்பிட்டோம். அவை தவிர, எந்த மொழியில் பாடினாலும் ஏற்கக் கூடிய சபைகள் பலவிலும் தமிழ்ப் பாடல்கள் பல ஒலித்ததைக் கேட்டவர்கள் அறிவார்கள். 'ஆசாரம் என்ற பெயரில் பல கட்டுப்பெட்டித்தனங்களைச் சுமக்கும் இடம்' என்று பலரால் வர்ணிக்கப்படும் இடமான ம்யூசிக் அகாடமியில், நான் கேட்ட கச்சேரிகளில் பல தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. சிக்கல் குருசரண் என்ற இளைஞர் தனது கச்சேரியை, ஓர் அரிய (தமிழ்) வர்ணத்தில் தொடங்கினார். வளர்ந்து வரும் கலைஞரான ஸ்வர்ண ரேதஸ், தனது கச்சேரியின் முதல் பிரதான உருப்படியை 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று தமிழில் பாடினார். அதற்காக, அவர்களுக்குத் தனியாக ஏதேனும் பாராட்டு கிடைத்ததா? குறைந்த பட்சம், பத்திரிகை விமர்சனங்களாவது, இவ்விஷயங்களைக் குறிப்பிட்டு, உற்சாகப்படுத்தினவா? உண்மையில், அந்த அகாடமி கூட்டத்தில், சீன மொழியில் பாடினாலும், தமிழில் பாடினாலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

மொழியையும் தாண்டி இசையை ரசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அக்கூட்டமே இன்று சபைகளை நிரப்புகிறது. அவர்களுக்கு 'கத்தன வாரிகி' பாடினாலும் ஒன்றுதான், 'காண வேண்டாமோ! இரு கண் இருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்' என்று தமிழ்த் தேனில் குளிப்பாட்டினாலும் ஒன்றுதான். அந்தக் கூட்டமே ம்யூசிக் அகாடமி கச்சேரிகளுக்கும் வருகிறது, தமிழிசைக் கச்சேரிகளுக்கும் வருகிறது. வருடா வருடம் நம் காதுகளில் விழும் புலம்பல்கள் உண்மையெனில், ம்யூசிக் அகாடமி கூட்டத்தை விட, அண்ணா நகரில் நடைபெறும் தமிழிசைக் கச்சேரிகளுக்கு, கணிசமான அளவில் கூட்டம் கூட வேண்டாமோ? அல்லது, தமிழில் பாட வேண்டி தலையங்கங்கள் எழுதும் பத்திரிக்கைகள்தான், தமிழில் பாடுபவர்களுக்காக தனிப்பக்கங்கள் ஒதுக்கியிருக்க வேண்டாமோ? ஒரு பிரபல பத்திரிகையில் வந்த இசை விமர்சனம், பாடகர் ஒரு தமிழ்ப் பாடலைத் தவறாகப் பாடியதாகச் சாடியது. அப்பாடகர் புத்தகத்திலிருந்து நகல் எடுத்து அனுப்பி, தான் பாடியது சரி என்று நிலைநாட்டிய பின்னும், "பாடகர் நகல் அனுப்பியிருந்தார். இருப்பினும் அந்தக் காலத்தில் நான் கேட்டது வேறு மாதிரி இருந்தது.", என்ற விமர்சகரின் சப்பைக்கட்டே பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இதே பாடகர் புரியாத பாஷையில் பாடியிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது என்ற நிலையில், பாடகர் அடுத்த கச்சேரியில் தமிழில் பாட யோசிப்பார்தானே?

கர்நாடக இசைத்துறையும் ஒரு தொழிலே! அங்கு பாடுபவர்களும், பொருள் ஈட்டி, நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டியே பாடுகிறார்கள். மென்பொருள் விற்பன்னரைப் போல, பங்குச் சந்தை நிபுணரைப் போல, கர்நாடக இசைப் பாடகரும் ஒரு professional-தான். அப்படிப்பட்ட நிலையில், எவையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, எவையெல்லாம் கிடைப்பதற்குச் சுலபமாக உள்ளதோ, அவற்றை வைத்துத் தனது கச்சேரியை அமைத்துக் கொள்ளும் பாடகரை நாம் எப்படித் தவறு சொல்ல முடியும்? எந்த மொழிப் பாடல்கள் வேண்டுமானாலும் விற்கும் என்றால், சுலபமாகப் பாடம் செய்யக்கூடிய தெலுங்கு கீர்த்தனைகளையே பாடகர்கள் நாடுவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ்ப் பாடல்களுக்குத் தனிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், தமிழிசை பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த மார்கழியில், மூன்று கச்சேரிகளில், கச்சேரிக்கு முன் பாடகர்களைச் சந்தித்து எங்களுக்குப் பிடித்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடுமாறு வேண்டினோம். அம்மூன்று பாடகர்களுமே எங்கள் கோரிக்கைக்கு இணங்கினர்.

தமிழிசையில் உண்மை நாட்டம் உள்ளவர்கள் கச்சேரிகளுக்கு வர வேண்டும். தயங்காமல் தங்கள் விருப்பத்தைப் பாடகருக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழிசைக் கச்சேரிகள் நிகழும் இடங்களில் கூட்டம் குவிய வேண்டும். கச்சேரி நிகழ்த்தும் சங்கங்களுக்கு லாபம் பெருக வேண்டும். அச்சபைகளின் வளர்ச்சி, மற்ற சபைகளை அவ்வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும். பத்திரிக்கைகள், வருடம் ஒரு முறை நிகழ்த்தும் திவசம் போல, 'ஒரு தலையங்கம் எழுதினால் எங்கள் கடன் தீர்ந்தது', என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பாடல்கள் பாடுபவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அந்த உற்சாகம் பாடகர்களைப் பல புதிய பாடல்களைத் தேட நிச்சயம் செலுத்தும். அப்போது, புதைந்து கிடக்கும் பல மாணிக்கங்கள் வெளிக்கொணரப்படும்.

வரலாறு.காம் வாசகர்களுக்குத் தமிழிசை பொங்கும் இனிய புத்தாண்டாக இவ்வாண்டு மலர இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

அன்புடன்,
ஆசிரியர் குழு.

Wednesday, October 25, 2006

28ம் இதழின் பிற கட்டுரைகள்

இப்போது நாங்கள் புதிதாக மேற்கொண்டிருக்கும் பணியான 'ஐராவதி' நூல் தயாரிப்பின் ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'ஐராவதி சிறப்புப்பகுதி'யில் இந்த மாதம் இடம்பெறும் கட்டுரை முனைவர்.இரா.கலைக்கோவன் அவர்கள் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களைப் பற்றி எழுதிய அறிமுகக்கட்டுரை.

திருச்சிராப்பள்ளி டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் வரலாறு.காம் பங்கு பெற்ற ஆய்வுகளான திருவலஞ்சுழி மற்றும் உடையாளூர் ஆகிய இரண்டையுமே இந்த மாத இதழ் தாங்கி வருகிறது.

தமிழ் மீது ஆர்வமும் பற்றும் உள்ளவர்கள் ஜப்பான் வந்தால் அவர்களுக்கு எந்த விதமான பேரின்பங்கள் கிடைக்கும்? விளக்குகிறது ஜப்பானில் தமிழும் பரதமும் கட்டுரை.

தூங்கப்போகும் முன் கதைகேட்க விரும்பும் குழந்தைபோல மாதந்தோறும் வாசகர்கள் விரும்பிப் படிக்கும் கோகுலின் கதைநேரம் பைசாசம் மற்றும் கல்வெட்டு சொல்லும் கதையுடன்.

பிறகு வழக்கம்போல் இந்த மாதம் நாங்கள் பார்த்த மற்றும் பரிந்துரைக்கும் வரலாறு தொடர்பான சில இணையத் தளங்களின் பட்டியல்.

ஓடும் எல்லா நதிகளும் கடைசியில் சேருவது கடலில்தான் என்பது போல, நாங்கள் எழுதும் அனைத்துமே உங்களுக்குத்தான். எங்களை மகிழ்விப்பதும், வரலாறு இணைய இதழின் மூலம் சிறிதளவு பயன் பெற்றோம் என்ற உங்களின் பின்னூட்டம்தான்.

என்றும் நன்றியுடன்
ஆசிரியர் குழு.

இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள் - II

வரலாறு.காம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, கிடைக்கப்பெற்ற வாழ்த்துச் செய்திகளின் அடுத்த பகுதி. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. மேலும், தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்துத் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



1
Tamilselvan(9/19/2006 12:24:07 PM)

Very Good Effort . I congratulate the entire team behind Varalaru .


2
Krishna Sellathamby(9/20/2006 6:04:19 PM)

வணக்கம். இரண்டு ஆண்டுகள் இந்த பொக்கிஷம் எப்படி எனக்கு தெரியாமல்போனது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. ஏனெனில் ஒரு மாதத்துக்கு முதல் தான் என்னால் varalaaru.comஐ பற்றி அறிய முடிந்தது. என்னே அருமை. நேற்று முளைத்த காலாச்சாரங்களையெல்லாம் இன்றைய தமிழ் இளைய தலைமுறை உயர்வாக எண்ணும் இக்காலத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக இந்த உலகத்துக்கு நாகரீகத்தையும் பண்பட்ட கலாச்சாரத்தையும் வழங்கிய தமிழர்களின் வரலாற்றை ஆதாரத்தோடு எமக்கு வழங்கும் இந்த இணையத்தளமும் அதன் குழுவினரும் வாழ்க. முக்கியமாக திரு கோகுல் அவர்களின் கதைகள் பிரமாதம். கிழக்கிலங்கையைச் சேர்ந்தாலும் இந்திய தமிழருடன் சேர்ந்து எம் தமிழரின் வரலாற்றை பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நன்றி


3
Iraq Tamilargal(9/21/2006 12:14:58 AM)

hello,we are from iraq,Its really happy to read your article every month. Thanks for your great work. you are doing the right thing Take care. We will be thinking of you all!


4
Kavitha(9/21/2006 2:44:04 AM)

Congrats to Varalaaru Team. Keep the good work going. We are also thankful for the historical info posted. Wish the team again for the good work and its success.


5
Krishna Kumar(9/21/2006 5:53:45 AM)

Hi My nameis Krishna KUmar and i am from Tambaram, chennai. by accident, i found your site. it is very interesting and informative. I also used to travel a lot. But it is surprising how you people find time. Keep it up. endrendrum anbudan kk. My spl enquiries to Kamal,Ram,Seetharaman,Lavanya,Krupa and Gokul


6
S.Balasubramani B+(9/23/2006 9:14:47 AM)

greeting again for your effort for retaining heritage with rewriting history through modern. tech. why dont u go for publication and create history club .I am ready to coordinate for your publication project.book will be distributed to all tamil associations and tamil wellwishers around the world.


7
S.Ganesan(9/25/2006 2:15:35 AM)

Dear DR.Kalaikovan, I am Ganesan from Chennai. I came to Japan in July.While going through the sites in Tamil, I came across your emagazine. It is a pleasant surprise. HEARTY CONGRATS. They are as good as your print issues. With best wishes


8
Kandaswamy(9/25/2006 6:51:44 AM)

This is the site I was expecting for a long time. I will be happy if you can send me lessons of How to read stone inscriptions ( kalvettu) from basic. The photos given in the articles are not clear


9
Deven(9/27/2006 8:00:00 AM)

Wonder ful site! Really i felt very happy and lucky when i found this website. Thanks a lot ! incase of i need more details about some details whom should i contact? Regerds S. Deven


10
surya(9/28/2006 9:30:08 AM)

Hi I am Surya from Dubai. Happen to see this site. Great work. Xlent. Keep it up team. Surya Dubai


11
S.Rajakumar(9/28/2006 8:35:19 PM)

It is a very good work, i can not find a word to appreciate the work. keep it up Raja


12
Aru(9/30/2006 12:18:32 AM)

Dear All, I'm Aru from Malaysia. Inthe Varalaaru minnithal, Tamil Inaiye Varalaaddril varalaaru pathikke enathu iniye vaazthukkal.


13
A.Vaidyanathan(10/1/2006 1:45:05 AM)

Your website is doing an excellent job and interests everyone who may not be an avid reader of South Indian History. I have a request..you publish photos of gods in the home page. Though you are giving sketchy details about the image it would be grateful if you give more info regarding the statue, its period, which King had done that etc. it would be nice. thanks.Arunachalam Vaidyanathan


14
Kannan(10/3/2006 1:43:30 PM)

Vannakam, All the best for your noble work.


15
P.Pushkala(10/11/2006 12:14:42 PM)

I agree with ur feelings. Even the educated people too dont have any respect to our country or culture. PEOPLE in the name of bhakti spoils the temple and its past glory. Local people don't want to know their village's past glory. I am so happy to see people who were with same intersts of me.


16
S.Narayanan Fremont USA(10/11/2006 7:28:01 PM)

you people are creating an awareness in our history which is solid ,wealthy & need proper interpretation Kudos to your yeoman service.

இமயத்துக்கே மகுடமா?

வாசகர்களுக்கு வணக்கம்.

இரண்டாண்டுகள் நிறைவையொட்டித் தொடர்ந்து வாழ்த்துக்களை அனுப்பிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துச் செய்திகளின் இரண்டாம் பகுதி இங்கே. இதழ் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் பெரும்பாலும் பொன்னியின் செல்வன் யாஹூ குழும உறுப்பினர்கள் மட்டுமே படித்து வந்த நிலை மாறி, இன்று பல தளங்களில் இருக்கும் தமிழர்களையும் வரலாறு.காம் ஈர்த்திருப்பது குறித்தும் வரலாறு.காம் மூலம் பொ.செ குழுவைப் பற்றி அறிந்து கொள்வது குறித்தும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் சில கருத்தரங்குகளுக்குச் சென்றிருந்தபோது, பல அறிஞர்களையும் அவர்களது சிறந்த ஆராய்ச்சிகளையும் கண்டு வெகுவாக வியந்து இருக்கிறோம். இவர்களைப் போல் நம்மாலும் குறிப்பிடத்தக்க (Significant) ஒரு அரிய கண்டுபிடிப்பை ஆய்வு செய்து அறிஞர் வரிசையில் இடம் பிடிக்க முடியுமா என்று ஏங்கியதுண்டு. ஆனால் இன்று, அத்தகைய அறிஞர்களிடமிருந்தே பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெறும்போது உள்ளம் கள்வெறி கொண்டு, உடனே நெகிழ்ந்தும் போகிறது.

சென்ற மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'தமிழக வரலாற்றில் அண்மைக் கண்டுபிடிப்புகள்' என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, பேராசிரியர் முனைவர். இராஜகோபால் அவர்கள் முனைவர் நளினியிடம் 'வரலாறு.காம்' இதழை யார் நடத்துகிறார்கள் என்று கேட்டுப் பாராட்டியதைக் கேட்டதும், வரலாறு.காம் அவருக்கு எந்த அளவுக்கு நிறைவு தந்திருக்கிறது என்று புரிந்து கொண்டோம். ஆய்வுகள் பல செய்த அப்பெருந்தகைக்கு இம்மின்னிதழைப் படித்துத்தான் தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லாதபோதும், 'எதேச்சையாகப் பார்த்தேன்! இரண்டாண்டுகளாக வருவது தெரியாமல் போயிற்றே! ரொம்ப எளிமையா செய்யறீங்க!' என்று சொன்னது மிகப்பெரும் ஊக்க மருந்தாக அமைந்தது. ஆய்வுலக மாளிகையின் முதல் படிக்கட்டில் ஏறிவிட்டோம் என்று மனம் ஆனந்தக் கூச்சலிடும் அதே வேளையில், எங்கள் முன் காத்திருக்கும் கடமைகளையும் அறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கும், ஆய்வுப்பாதையில் காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் இராஜராஜீசுவரப் பெருவுடையாரை வேண்டுகிறோம்.

ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து, அதில் முன்னேறும்போது வாழ்த்துச் சொல்பவர்களுக்கு மட்டும் நன்றி கூறினால் போதாது. அவ்வழியை அமைத்துத் தந்தவர்களையும், அதில் ஏற்கனவே பயணித்து, கற்களையும் முட்களையும் அகற்றித் தந்தவர்களுக்கும் நன்றி கூறுவதுதானே தமிழ்ப் பண்பாடு! அந்த வகையில், 'தொல்லியல் இமயம்', 'பிராமி கல்வெட்டுகளின் தந்தை' என்றெல்லாம் சக ஆய்வாளர்களால் போற்றப்படும் திரு ஐராவதம் மகாதேவன் IAS அவர்கள் மத்திய அரசுப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, தம் வாழ்நாளையே தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளுக்காக அர்ப்பணித்ததற்கு நன்றி செலுத்துவது நம் அனைவரின் கடமை. அவரது அடையாள அட்டை என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தரம் வாய்ந்த 'Early Tamil Epigraphy' என்ற அவரது புத்தகத்துக்காக அவர் உழைத்தது ஒன்றல்ல; இரண்டல்ல; சுமார் 42 வருடங்கள். இதிலிருந்தே அவரது அர்ப்பணிப்பு எத்தகையது என்று வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பை 'Discovery of the Century!!' என்று பாராட்டியது பிற ஆய்வாளர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார் எனப் புரிந்து கொள்ள உதவும்.

இதுபோல் இன்னும் எண்ணற்ற சிறப்புக்களைப் பெற்ற இத்தகைய ஓர் அறிஞரது வாழ்நாள் சாதனைக்காக மரியாதை செய்ய வரலாறு.காம் முடிவெடுத்திருக்கிறது. அவரது ஆய்வுகளையும் உழைப்பையும் மையமாக வைத்து ஒரு 'Felicitation Volume' வெளியிட இருக்கிறோம். அதற்கு 'ஐராவதி' என்ற பெயரை வைத்துக்கொள்ள இசைந்திருக்கிறார். இதற்காகத் திட்டம் தயாரித்தபோது, அவருடன் பணியாற்றிய அறிஞர்களிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்றுத் தொகுத்து வெளியிடச் சில மாதங்கள் ஆகும் என்று தெரியவந்தது. அதுவரை வரலாறு.காமில் 'ஐராவதி சிறப்புப் பகுதி'யின் மூலம் நூலின் அறிமுகமும் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களைப் பற்றிய தகவல்களும் தொடர்ந்து இடம்பெறும்.

இப்பொழுதுதான் ஆய்வுலகின் முதல் படிக்கட்டில் ஏறியிருக்கும் இச்சிறுவர்களால் வாழ்நாள் சாதனை புரிந்த ஒரு இமயத்துக்கு மகுடம் சூட்ட முடியுமா? போதிய அனுபவம் இருக்கிறதா? அதனால்தான் திருச்சிராப்பள்ளி டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வழிகாட்டலின்படி செயல்பட முடிவெடுத்திருக்கிறோம். முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களை ஆசிரியராகவும் முனைவர் மா.இரா.அரசு மற்றும் முனைவர் மு.நளினி ஆகியோரை இணையாசிரியர்களாகவும் கொண்டு வெளிவரும் இந்நூலுக்கான பணிகள் இன்னும் பல ஆய்வு மற்றும் பதிப்பு நுணுக்கங்களை எங்களுக்குக் கற்றுத்தரும் என நம்புகிறோம்.

ஆகவே வாசகர்களே, விரைவில் எதிர்பாருங்கள்!! வரலாறு.காம் டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்துடன் இணைந்து பெருமையுடன் வழங்கும் 'ஐராவதி'!!

வழக்கம்போல உங்களின் ஆதரவைக் கோரும்
ஆசிரியர் குழு

Saturday, September 23, 2006

27 ஆம் இதழின் மற்ற கட்டுரைகள்

சென்ற இதழில் இடம்பெற்ற மா.இலாவண்யாவின் கல்வெட்டாய்வு கட்டுரையின் தொடர்ச்சி மகேந்திரரின் விருதுப்பெயர்கள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கற்கோயில்கள் எடுப்பிக்கப்பட்ட காலத்தில் குடைவரைகளை அமைத்த பல்லவர், பாண்டியர், சேரர், முத்தரையர் மற்றும் அதியர் ஆகியோரது படைப்புகள் எந்த விதத்தில் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன என்று சுருக்கமாக விளக்கியுள்ளார் முனைவர் மு.நளினி.

தென்னிந்தியாவின் முதல் கற்கோயிலான விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு இலக்ஷிதாயதனத்துக்குத் தன் பேரக்குழந்தைகளை அழைத்துச் சென்று விளக்கும் தமிழ்த்தாத்தாவின் மூலமாக ம.இராம்நாத்தின் வர்ணனைகள்.

தஞ்சை பெரியகோயில் உண்மையிலேயே பொன்னால் வேயப்பட்டிருந்ததா? திருவாரூர் மற்றும் திருவீழிமிழலையின் பொன் வேய்ந்த கல்வெட்டுக்களின் துணையுடனும் பழந்தமிழ் இலக்கியங்களின் துணையுடனும் தஞ்சைக் கல்வெட்டை ஆராயும் முனைவர் இரா.கலைக்கோவன் தன் தந்தையாரைப் பற்றி தீட்டிய சொல்லோவியத்தின் ஒரு பகுதி கலைக்கோவன் பக்கத்தில்.

வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும் உடையார்குடிக் கல்வெட்டின் இறுதிப்பகுதி விளக்கம் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் கைவண்ணத்தில்.

பெருவிருந்துக்குப் பின் தரப்படும் இனிப்பு/ஐஸ்கிரீம் போல கோகுலின் கதைகள். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத பைசாசமும் நிழலா நிஜமா என்ற பரம ரகசியத்தைத் தாங்கி வந்திருக்கும் கல்வெட்டு சொன்ன கதையும் உங்களுக்காக வெயிட்டிங்.

வேறென்ன வேண்டும்? படித்துவிட்டு வழக்கம்போல் பின்னூட்டம் வழியாக உங்கள் ஆதரவுதான்.

நன்றி.

இப்படிக்கு,
மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும்
வரலாறு.காம்

இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள்

வரலாறு.காம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, கிடைக்கப்பெற்ற வாழ்த்துச் செய்திகளின் ஒரு பகுதி. வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. மேலும், தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்துத் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



1
Satish Kumar (8/21/2006 4:25:27 AM)

Congrats team. I am happy for you all. Stepping into the third year successfully shows what you have acheieved. Great going.
Regards, Satish


2
S.Balasubramani (8/21/2006 4:37:11 AM)

kalingathilirundu ,ungal vervaigalin unarvai purindha vasagarin idyam kanintha vazhlthukkal


3
shankaran (8/21/2006 4:39:24 AM)

Hi Friends, My best wishes , Its happy to claim i also a friends in u r team, but my unfortunate thing is before i started learning from u all, u left us alone and gone out of country, anyhow as u said travel teach us the life, looking forward many more travels with u r team keep going on friends


4
D.SESHADRI (8/22/2006 8:51:20 AM)

To remember with gratitude those who have helped us in treading a new path is the article of faith with the Tamizhan. This the varalaaru.com editorial staff has done while completing two years in their literary journey is most gratifying. That they have thanked the viewers will be appreciated by us all,for it is the they who matters most. For what is the use of all this pleasureful pain, unless it reaches the eight 'thisaigal'? This 'minmalar' speaks of the multitudinous talents of Raja Mahendravarman esp. as seen in his satirical writings. That he never said that he was a know-all,and kept a cool and light head, places him in a higher pedestal than many of the kings that we know of.The digging of rocks and conceiving the cave temples was an entirely new path taken up and finetuned by the Pallavas (eventhough taken up possibly simultaneously by the Pandiyas,) In scale and richness of details these cave temples remain unparellelled till this day. For a tired and weak soul, a journey to these cave temples will be a certain refreshing tonic.These aspects have amply been covered in earlier 'Ithazhal'. I request if some one will take up the statecraft of Mahendravarman in facing the mighty army of Pulikesi and give us in detail in the forthcoming issues. For it is in facing defeat and destruction that a man's true mettle is exposed. May as an elder, bless these youth in their endevour so that the reach goes far and wide and becomes a forum for greater and enlightened participation in times to come?


5
திவாகர் (8/24/2006 7:14:25 AM)

மிக நல்ல முயற்சிகள் எப்போதுமே வெற்றியைத்தான் தழுவும். இது வரலாறு. வரலாறு.காம் இதழுக்கு வாழ்த்துகள்.


6
sps (8/24/2006 7:36:04 AM)

2nd year completed ! Great ... Green memories .. Congrats Kamal, Ram, Lavanya, Gokul Krupa & Ramnath ! God Blessed us to meet Dr. Kalaikkovan & Dr. Nalini .. Great accomplishments .. Uncompromising research .. ! We too start look into this direction .. Best regards ..


7
MURUGANANDHAM (8/26/2006 5:16:11 AM)

SOLLA VAARTHAIGAL ILLAI, BUT SOLLAMAL IRUKKAVUM MUDIYADHU APPADI SOLLAVILLAI ENDRAAL NAAN MANNIKKAPADADHAVAN. UNGAL MANADHIL ENNATTRA ENNANGAL IRUKKUM ADHU ENNA (ENDHA VADIVATHIL IRUKKUM) EPPOLUDHU VELI ULAGATHUKKU VARUM IDHELLAM ENGALUKKU THERIYADHU BUT ANDHA ENNANGAL ENDRU VANDHAALUM ORU MIGAPERIYA PADAIPPAGATHAN VARUM ENDRU ENNAL (ENGALAAL) NICHAYAMAGA NAMBA MUDIGIRADHU ADHARKAAGA NAN UNGAL PAYANAM NALLAMURAIL NDADNDHU UNGALUKKU VETRI KIDAIKA AANDAVANAI VENDUGIREN NEENGAL ANAIVARUM TAMILUKKU KEDAITHA ARPUDHA POKKISHAM INDHA POKKISHANGAL ANAITHUM KOODI TAMILARKKU MAADHAM ORU POKKISHAM KODUKIRADHE ADHUVE PODHUME, NALAMODU ELLAM NADAKKA AANDAVANIDAM KATTAYAM VENDIKOLVEN UNGAL PAYANATHIL VETRIYODU THIRUMBA ENN VAALTHUGAL MANNIKKAVUM(VAALTHA VAYASU ILLAI AADHALAL VANANGU GIREN)
(தமிழில்)
சொல்ல வார்த்தைகள் இல்லை, ஆனால் சொல்லாமல் இருக்கவும் முடியாது. அப்படி சொல்லவில்லை என்றால் நான் மன்னிக்கப்படாதவன். உங்கள் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் இருக்கும். அது என்ன, எந்த வடிவத்தில் இருக்கும், எப்பொழுது வெளி உலகத்துக்கு வரும், இதெல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால் அந்த எண்ணங்கள் என்று வந்தாலும் ஒரு மிகப்பெரிய படைப்பாகத்தான் வரும் என்று என்னால் (எங்களால்) நிச்சயமாக நம்ப முடிகிறது. அதற்காக நான் உங்கள் பயணம் நல்லமுறையில் நடந்து உங்களுக்கு வெற்றி கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் தமிழுக்கு கிடைத்த அற்புத பொக்கிஷம். இந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கூடி தமிழருக்கு மாதம் ஒரு பொக்கிஷம் கொடுக்கிறதே, அதுவே போதுமே! நலமோடு எல்லாம் நடக்க ஆண்டவனிடம் கட்டாயம் வேண்டிக்கொள்வேன். உங்கள் பயணத்தில் வெற்றியோடு திரும்ப என் வாழ்த்துக்கள். மன்னிக்கவும். வாழ்த்த வயசு இல்லை ஆதலால் வணங்குகிறேன்.


8
saravanan.L (8/26/2006 10:07:30 AM)

நான் சில நாட்க்களாகதான் வரலாறு.காம் படித்து வருகிறேன். பல புதிய செய்திகளை கொடுக்கும் தங்கள் முயற்சி வளர வாழ்த்துகிறேன். நான் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறேன். இங்குள்ள மக்களுக்கு வரலாற்று அறிவு என்பது கொஞ்சமும் இல்லை. தங்கள் வரலாற்றை எழுதி வைப்பது மத ரிதியில் தவறாக பார்க்க படுகிறது. இதனால் தங்கள் முன்னோர் பட்ட கஷ்டங்களை மறந்து, பெட்ரோல் கொடுத்த புதிய காசில், வாழ்க்கையில் இளம் தலைமுறை சீரழிகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது, நமது பெருமையும், ஆழ்ந்த வரலாறும் உள்ள தமிழகத்தின் பெருமையை பறை சாற்றி அடுத்த தலைமுறைக்கும் புரியும் விதமாக நமது வரலாற்றை எடுத்து உரைக்கும் தங்கள் முயற்சி மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். நேசத்தின் சுவாசத்தில் சரவணன் லோகநாதன்.


9
Dr. M.Ramanathan. (8/27/2006 8:56:10 AM)

Amazing! As a Tamilian I am proud of your work especially when one realises that you are doing it purley out of love for our culture and history.The next time I visit Tamilnadu I will certainly be looking at the temples with a different eye! For some of us whose fluency in Tamil is just elementary your presentaion of our history will ceratinly go a long way to learn of our roots of which we should rightly be proud of. Please keep up your good work. Now I spent almost an hour a day at your site and hope to complete all your contributions soon. Your site has helped me to explain to my children (both born overseas and medical graduates)the deep seated meaning of the temple works and archeological findings in Tamilnadu.


10
bala (9/3/2006 9:20:49 AM)

i have just come across the issue. it seems wonderful to put in such painstaking efforts. i will read each and every issue of it from now on. congrats for your efforts. keep it up.


11
A.Ibrahim Shareef (9/9/2006 2:27:32 AM)

வணக்கம் ஆதாரங்களுடன் அன்றைய காலகட்டத்தை கண்முன்னே காட்டி விட்டீர்கள் அய்யா..! 1. செய்நன்றி மறப்பவர்கள் தமிழர்கள் அல்லர். இன்றுவரை தமிழர்கள் பிறர் செய்த உதவிகள் எதையும் மறக்கவில்லை.! ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலும் மற்ற மன்னர்களின் ஆட்சிக்காலங்களிலும் மக்கள் தங்களின் துயரை போக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது விடுதலைக்காக வேண்டியோ பல காரியங்களில் ஈடுபட்டிருக்கலாம். அவர்களால் நீங்கள் கூறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாமல் போயிருக்கும்.சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலங்கள் போய் இன்று சங்கங்கள் வளர்த்த தமிழையும் அதன் ஆதாரங்களையும் தேடிக்கொண்டிருக்கும் நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. 2. பல நூற்றாண்டுகள் கடந்து இன்னும் தம் தடங்களை சிறிது சிறிதாக அழித்தது போக மீதமுள்ளதுடன் வரலாற்றை உணர்த்திக்கொண்டிருக்கும் நினைவுச்சின்னங்களை காப்போம் என்று நீங்களும் நானும் இணையப்பயனாளர்கள் மட்டும் கூறிக்கொண்டிருப்பின் மட்டும் போதாது.! அரசிடமும் தொல்பொருள் துறையிடமும் கூறி அவற்றை மீட்க (அ) காக்க நடவடிக்கை எடுக்க முயற்சித்தல் வேண்டும். 3. வரலாறை வெறும் பாடமாக மட்டும் இன்றைய தலைமுறையினர் பயின்று வருகின்றனர். பாடத்திட்டமும் பாடங்களில் உள்ள கருத்துக்களும் அந்த அளவில் மட்டுமே படிப்பவர்களை ஊக்குவிக்கின்றது. இன்றைய கல்வித்திட்டம்-பாடத்திட்டம் மற்றும் பாடங்கள் ஆராய்ச்சிகளை சற்று விரிவாக விரிவாக்கம் செய்தால்தான் (அ) மேம்படுத்தினால்தான் வரலாறும் , வரலாற்றுச்சின்னங்களும் , நமது பொக்கிஷங்களும் பாதுகாக்கப்படும். இணையத்தில் தன்கருத்தை மேம்படுத்திக்கூறி தனக்கென ஓர் வட்டத்தை உருவாக்கிக்கொள்வோர் மத்தியில் அழிந்துகொண்டுவரும் வரலாற்றை விளக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி


12
Shyamala Sabesun (9/10/2006 12:59:04 PM)

The varalaaru.com is very helpful for people like us who has interest in the history but not having proper guiding. This articles give us awarness of our past history and make us to feel proud. I am once again thanking you people to run this wonderful emagazine. A very nice work and a must one for this generation people.


13
Sithiravel Sundareswaran (9/14/2006 8:06:52 AM)

inthe Ithal melum melum munera enathu valthukal


14
Tamilselvan (9/15/2006 11:40:57 PM)

It gives lot of proud and happiness to browse thru this site. Being a Tamilian , I thank you for bringing out wealth of infomation which will make every tamilian to be proud of . I wish you all the best.


15
kalaiselvan (9/16/2006 8:35:40 AM)

great efforts, my hearty congrtulations to all varalaaru.com family.


16
Senthilselvan Duraisamy (9/17/2006 2:11:22 AM)

Hello Mr.Gokul, I am Senthil s/o Mr. VR. Duraisamy of Namagiripet. I came to know about your magazine & your work from my father who you recently met. It is very impressive to see the articles and kind of information you & your team put together. Congrats on completing 2 years and wishing you all success! Thanks, Senthil


17
sripriya (9/18/2006 1:54:04 PM)

hello i am sripriya residing in abudhabi. i saw this site , it is really amazing and itis a boon for us to know about the facts which u have discovered. thank u.


அர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்

வாசகர்களுக்கு வணக்கம்,

சென்ற மாத மகேந்திரர் சிறப்பிதழைப் படித்து, தங்கள் கருத்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்ட வாசகர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துச் செய்திகள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன.

கோயில்கள் நம் தலைப்பெழுத்தைத் தாங்கி நிற்கும் கருவூலங்கள். அக்கோயில்களோடு அன்றாடம் தொடர்பு கொண்டு, அத்தலைப்பெழுத்துக்களைத் தவிக்க விடாமல் காக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் குருக்கள்தான். கடந்த மே மாதம், இப்போதைய தமிழக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், கோயில் குருக்கள் வேலைக்குப் பிறப்பால் இந்துவாக இருப்பதே அவசியம். ஒரு குறிப்பிட்ட சாதியையோ அல்லது சமூகத்தையோ சேர்ந்தவருக்கு மட்டுமே ஏக போக உரிமை என்னும் நிலை மாறி, அனைத்துச் சமூகத்தைச் சார்ந்தவருக்கும் அவ்வுரிமை உண்டு என்று உத்தரவு பிறப்பித்தது.

1972-இல் இதைப் போன்ற ஒரு ஆணை பிறந்த போது, சுப்ரீம் கோர்ட்டின் 'stay order' இதை அமுலுக்கு வரவிடாமல் தடுத்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இச்சட்டம் மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஏற்றத்தாழ்வுகளை அறவே ஒழித்தல் சாத்தியமன்றெனினும், இறைவனுக்கு முன்னாவது அத்தகைய பாகுபாடுகள் இல்லாமல் இருப்பது அவசியம்.

'அர்ச்சகராக விழைவோருக்குத் தேவையான தகுதி வரையறுக்கப்பட்டுத் தகுந்த பயிற்சியும் அளிக்கப்படும்', என்று தமிழக அரசின் அறிக்கை தெரிவித்தாலும், அத்தகுதிகள் யாவை, அர்ச்சகருக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் என்ன என்பதைப் பற்றி அறியக் கூடவில்லை. இந்நிலையில், சில கருத்துக்களை இங்கு முன் வைக்கிறோம்.

தமிழ் மற்றும் சரித்திரப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் கூறியது போல, "குருக்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புத் தேறியவர்களாக இருத்தல் வேண்டும். அப்படித் தேறியவர்களுக்குப் பல்கலைக்கழகங்களின் சார்பில் சரித்திரம், சமயம், கலைகள் முதலானவற்றில் பயிற்சியளித்துப் பட்டயமும் வழங்கப்பட வேண்டும்."

ஒரு கோயிலைத் தரிசிக்கச் செல்லும் பொழுது, பெரும்பாலும் அவ்வூர்க் குருக்கள் சொல்வதையே உண்மை என நம்ப வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அங்கு இருக்கும் அர்ச்சகர்கள் உண்மையை உணர்ந்திருத்தல் அவசியமாகிறது. இல்லையேல், பல புரளிகள் பரவி, அப்புறம் எத்தனைதான் முயன்றாலும் நிழலைத் துடைத்து நிஜத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதென்பது கடின்மாகிறது.

குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது அர்ச்சகர்களுக்குப் பயிற்சியளித்தல் அவசியம். அப்பயிற்சியின் பொழுது, அவர்கள் இருக்கப் போகும் மண்டலத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோயில்கள், அதைக் கட்டியவர்கள், அக்கோயில்களில் கிடைக்கும் அரிய கல்வெட்டுகள் பற்றிய தகவல்களை அவர்கள் பெற வேண்டும். மேலும் அக்கோயில்களைப் பற்றித் திருமுறையாளர்கள், ஆழ்வார்கள் முதலானோர் பாடிய பாடல்களையும் இவர்களுக்குப் போதித்தல் அவசியம். சிவன் கோயில்களில் தேவாரமும், வைணவ ஆலயங்களில் பிரபந்தமும் நாள் தோறும் ஓத வழி வகுத்து, தமிழ் மணம் பரப்பும் மலர்களாய் இவ்வர்ச்சகர்கள் உருவாக வகை செய்தல் அவசியம்.

கோயில்கள் கலையின் இருப்பிடங்கள். இக்கலைக் களஞ்சியத்தைக் காக்கும் பொறுப்பு பெரும்பாலும் அர்ச்சகர்களையே சார்ந்து இருக்கிறது. இவ்வர்ச்சகர்களுக்கும் இக் கலையுணர்வு இருக்குமாயின், பல கோயில் திருமேனிகளின் மேல் குளவிக் கூடுகளும், கரப்பான் பூச்சியின் வீடுகளும் அமையாமல் தடுக்க முடியும். சுகாதாரத்தின் அவசியம் உணர்ந்தவர்களாய் இவ்வர்ச்சகர்கள் வளர்ந்து, திருமஞ்சனம் மற்றும் பல சடங்குகளின் பொழுது, எதை எல்லாம் உபயோகிக்கலாம், எதனை உபயோகித்தால் சிற்பங்கள் பாழாகும் என்பதை உணர்ந்தவராய் இருத்தல் அவசியம். பல சமயங்களில், எது அழகு என்றே உணராதவராய் நல்ல சிற்பத்தின் மேல் 'oil paint' வண்ணத்தை அழகென நினைப்பவராய்க் கோயில் திருப்பணியாளர்கள் அமைந்து விடுகிறார்கள். உண்மையான கலையுணர்வும், இரசனையும் ஏற்படின், பல நூற்றாண்டுகளாய் நிற்கும் சிற்பங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் நிற்க வழி பிறக்கும்.

அன்புடன்,
ஆசிரியர் குழு.

Monday, August 21, 2006

பல்லவ மாமன்னர் மகேந்திரவர்மர் சிறப்பிதழ்

மூன்றாண்டுகள் முடிவில் நாங்கள் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்க்கிறோம். இரண்டாண்டுகளா? மூன்றாண்டுகளா? வரலாறு.காம் பிறந்து இரண்டு ஆண்டுகள் மட்டும் முடிந்திருந்தாலும், அதற்கு முன் ஒரு வருடம் கற்றவை விதைத்த நம்பிக்கை விதையில்தான் இதழ் மலர்ந்து வரலாற்றுத்தரு செழித்து வளர்ந்து 400 கனிகளை ஆன்லைனில் உங்கள் பார்வைக்குப் படர விட்டிருக்கிறது. இந்நிலையில், இதற்குத் தண்ணீர் ஊற்றியவர்களை நினைவு கூராமல் இருக்க முடியுமா? அதற்காகத்தானே யார் மறந்தாலும் காலதேவர் மறக்காமல் தேதியையும் மாதத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறார். முதல் ஒரு வருடம் கற்றவை பாடத்திட்டத்திலிருக்கும் பாடங்கள் என்றால், பொன்னியின் செல்வன் குழுவினருடன் முதல் யாத்திரை சென்று வந்த பிறகு கற்றவை நுழைவுத்தேர்வுக்குத் தயார் செய்ததைப் போலாகும். வரலாற்றுப் பாடங்களைக் கற்றுக்கொண்டு நாங்கள் அப்படி ஒன்றையும் பெரிதாகச் சாதித்து விடவில்லை என்றாலும், வரலாற்று ஆய்வாளர்களின் முன் வைக்கப்படும் எங்கள் கேள்விகள் அலட்சியப்படுத்தப்படாமல் சற்று ஏறிட்டு நோக்கப்பட்ட பார்வையோடு பதிலிறுக்கப்படுவது எல்லோரும் பெறக்கூடிய வாய்ப்பல்ல என்பதை உணர்ந்திருக்கிறோம். எங்களுடைய இந்தத் தேடலுக்கு விடைதந்து தெளிய வைத்தவர்கள் நான்கு பேர். இது ஏற்கனவே சிலருக்குத் தெரிந்திருந்தாலும், புதியவர்களுக்காகச் சொல்லவேண்டியது எங்கள் கடமை.



மாமண்டூரில் மகேந்திரரின் குடைவரை அமைப்பை புரிந்துகொள்ள முயற்சிக்கும் வரலாறு டாட் காம் குழு (வெண்பாப் புலி கிருபா நீங்கலாக)இடமிருந்து வலம் - சே.கோகுல், ச.கமலக்கண்ணன், லலிதா (ம. இராம்), மா.லாவண்யா


முழுமுதற்காரணம் அமரர் கல்கி. இரா. கிருஷ்ணமூர்த்தி. எங்களுக்கு மட்டுமல்ல. இன்று வரலாற்றாய்வில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு மண்ணுலகச் சக்கரவர்த்திகள் இராஜராஜசோழரையும் மகேந்திரவர்மரையும் அறிமுகப்படுத்திய ஈடு இணையற்ற எழுத்துலகச் சக்கரவர்த்தி. பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் என்னும் பொந்திடை வைக்கப்பட்ட அக்கினிக்குஞ்சுகள் எக்காலத்திலும் அணையாமல் எதிர்காலத் தலைமுறைகள் அனைத்தின் நெஞ்சிலும் அக்கனலைப் பற்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பொன்னியின் செல்வன் மட்டுமல்ல. பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்துக்கும் எங்கள் வளர்ச்சியில் பங்குண்டு.

கல்கி பற்ற வைத்த இந்த நெருப்பைத் தகுந்த காலம் வரும் வரை அணையாமல் பாதுகாத்தவர் எங்கள் பெரியண்ணன் திரு. சுந்தர் பரத்வாஜ். கருவுற்ற ஒரு தாய், அக்கரு வளர்ந்து தன் சொந்த பலத்தில் உலகை எதிர்கொள்ளும் நிலை வரும்வரை பாதுகாத்து, காலம் வந்தவுடன் பெற்றுத் தந்தையின் கையில் ஒப்படைப்பதைப் போல, இன்றும் சோழர் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்குத் தார்மீக பலமாக விளங்கி வரும் இச்சிவபாதசேகரர் எங்களுக்குக் கிடைத்தது நாங்கள் என்றோ செய்த புண்ணியத்தின் பலன். ஏற்கனவே பலமுறை பல கட்டுரைகளின் வாயிலாக நன்றி தெரிவித்திருந்தபோதும்கூட, இதை எழுதும்போதும் உள்ளம் நெகிழத்தான் செய்கிறது.

பெரியண்ணனின் அரவணைப்பிலும் வழிகாட்டலிலும் வளர்ந்து வந்த எங்களை அறிவூட்டும் தந்தையின் நிலையிலிருந்து தத்தெடுத்த முனைவர் இரா. கலைக்கோவன் மூன்றாமவர். நாங்கள் எதிர்கொண்ட வரிசையில்தான் மூன்றாவது மனிதரேயொழிய, அணுகுமுறையில் மூன்றாம் மனிதராக என்றுமே உணர்ந்ததில்லை. எங்களில் ஒருவராக, தந்தை - மக்கள் என்ற தலைமுறை இடைவெளியுடனோ, ஆசிரியர் - மாணவர்கள் என்ற மரியாதை கலந்த பயத்துடனோ இல்லாமல், அனைவரும் நண்பர்கள் என்ற உயர்ந்த உள்ளத்துடன் எங்களை வழிநடத்திச் செல்பவர். ஒருமுறைக்குப் பலமுறை உறுதி செய்யப்பட்ட உண்மைகள் மட்டுமே வரலாறு என்னும் மகுடம் தாங்கத் தகுதி படைத்தவை என்ற தாரக மந்திரத்துடன் ஆய்வுலகிற்குள் எங்களைக் கைப்பிடித்து உடன் அழைத்துச் செல்பவர்.

மூவர் வளர்த்த இந்த வேள்வித்தீயினால் யாராவது பயன் பெறவேண்டாமா? ஒவ்வொரு மாத வேள்வியின் முடிவிலும் கிடைக்கும் அவிர்பாகத்தைச் சுவைத்துவரும் வாசகர்களாகிய நீங்கள்தான் வரலாறு.காம் கட்டடத்தின் நான்காவது தூண். இதுவரை வெளியாகியுள்ள 25 இதழ்களுக்கும் தாங்கள் அளித்து வந்த ஆதரவு உள்ளம் நிறையச் செய்கிறது. படித்ததோடு மட்டும் நில்லாமல், கட்டுரைகளைப் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டது, அடுத்த இதழ்களைக் கவனத்துடன் வெளியிடப் பேருதவியாய் அமைந்தது. இதுவரை வெளியான 400 கட்டுரைகளுக்கும் தவறாமல் பின்னூட்டமளித்து, வரலாற்று ஆர்வலர்களை ஊக்குவிப்பதே தன் தலையாய பணி என்று நிரூபித்திருக்கிறார் பெரியண்ணன் சுந்தர் பரத்வாஜ்.

இங்கு இதுவரை முகம் காட்டாத ஒரு வாசகரைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. வரலாறு.காம் இதழை இதுவரை இரண்டே தடவைகள்தான் படித்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் படித்த நேரம் எவ்வளவு தெரியுமா? மொத்தம் 42 மணிநேரங்கள். 24-அக்டோபர்-2005 அன்று மாலை 6:30 மணியிலிருந்து மறுநாள் மதியம் 3:30 மணி வரையிலும், 13-மே-2006 அன்று அதிகாலை 2:30 மணியிலிருந்து இரவு 10:30 மணி வரையிலும் சிறிதுகூட ஓய்வின்றி அதுவரை வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் படித்து முடித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார். இதோ ஒவ்வொரு கட்டுரையையும் அவர் படித்த நேர அட்டவணை. அவரது ஐ.பி முகவரியிலிருந்து ஜப்பானில் வசிக்கிறார் என்று தெரிய வருகிறது. அவர் உடனடியாக ஆசிரியர் குழுவை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஜப்பானில் எந்த மூலையில் இருந்தாலும் சரி! அவரது இருப்பிடத்திற்கே நேரில் சென்று சந்தித்து நன்றி கூற கமலக்கண்ணன் தயாராக உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் நாங்கள் கற்றுக்கொண்டவைகளைவிட கற்க எண்ணி முடியாமல் போனவைதான் அதிகம். முதல் இரண்டு வருடங்களை விட இந்த வருடம் மேற்கொண்ட பயணங்களும் குறைவுதான். ஆனாலும், இராஜராஜீசுவரம் விமானத்தின் சிகரத்தைத் தொட எண்ணியிருந்தது ஈடேறியது அனைத்து இழப்புகளையும் ஈடு செய்து விட்டது. தற்பொழுது ஆசிரியர் குழுவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருப்பதால் வரும் ஆண்டிலும் பயணங்கள் குறைவாகத்தான் இருக்கும் என்ற போதிலும், அவ்வப்போது மேற்கொள்ளும் பாரதப் பயணங்களைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வோம். பயணங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் அனுபவ அறிவைப் பெருக்கும் முதல் ஆசான் என்பது வரலாறு காட்டும் உண்மை. வரலாறு.காம் காட்டும் உண்மை. பல்லவ மாமன்னர் மகேந்திரவர்மரை சிவகாமியின் சபத்தின் வாயிலாக, கலைகளை ஆதரிக்கும் ஒரு அரசராக மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு அவருடைய பல்வேறு பரிமாணங்களைப் புரிய வைத்து, இராஜராஜருக்கு இணையாக அவரது பிம்பத்தை எங்கள் உள்ளத்தில் உயர்த்தியது முனைவர் கலைக்கோவன் அவர்களின் 'மகேந்திரர் குடைவரைகள்' நூலுக்காக மேற்கொண்ட பயணங்கள்தான். அப்போது கற்றவற்றைச் சிறப்பிதழாக்கி உங்கள் முன் தவழவிட்டிருக்கிறோம்.

மகேந்திரவர்மரைப் பற்றி என்னென்ன பெருமைகள் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளன?

திருச்சிராப்பள்ளி டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.கலைக்கோவன், மகேந்திரரின் Personality study ஐ பேரறிவாளர் என்ற தலைப்பில் தொகுத்துள்ளார்.

மகேந்திரரின் விருதுப்பெயர்களில் ஒன்று சங்கீர்ணஜாதி. இது மகேந்திரரின் ஜாதியைக் குறிக்கிறதா அல்லது திறமையையா என்று லலிதா ஆராய்ந்துள்ளார்.

1400 வருடங்களுக்கு முன்பு மகேந்திரர் எழுதிய இந்து/சமண/பௌத்த மதங்களைக் கேலிசெய்யும் நகைச்சுவை நாடகங்கள் மத்தவிலாசம் மற்றும் பகவதஜ்ஜுகத்தைத் திறனாய்வு செய்து கமல், லலிதா, இலாவண்யா மற்றும் யக்ஞா வெளியிட்டுள்ளனர்.

விசித்திரச்சித்தர் முதலான எண்ணற்ற விருதுப்பெயர்களைக் கொண்ட மகேந்திரர் எந்தெந்த விதங்களில் அதற்குத் தகுதியானவர் என்று கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் விளக்கியுள்ளார் இலாவண்யா.

சங்க இலக்கியப் பசிக்கும் கதைநேரக் கொறித்தலுக்கும் கல்வெட்டு சொல்லும் ஒரு சிறுகதை மற்றும் ஒரு தொடர்கதையுடன் தக்க தீனி போட்டிருக்கிறார் கோகுல்.

பிறப்பால் அமெரிக்கராக இருந்தாலும், மகேந்திரர் மேல் கொண்ட காதலால் பல்லவர் வரலாற்றை ஆராய்ந்திருக்கும் பேராசிரியர் மைக்கேல் லாக்வுட், பல்லவ கிரந்த எழுத்துக்கள் தோன்றிய முறையை அலசிக் காயப்போட்டுள்ளார்.

மகேந்திரரின் குடைவரைகளுள் ஒன்றான விழுப்புரம் மாவட்டம் தளவானூரிலுள்ள சத்ருமல்லேசுவராலயத்திற்குப் பயணப்பட்டு வந்த இராம்நாத் குடைவரை அமைப்பை விளக்கியுள்ளார்.

சில இதழ்களுக்கு முன்பு வெளியான மகுடாகமம் - பரசிவம் - பொன்விமானம் பற்றிய கட்டுரை ஒன்றைப் பற்றித் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் முனைவர் இரா.கலைக்கோவன்.

கட்டுரைகளையும் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் பற்றிய தங்கள் எண்ணங்களை இங்கோ அல்லது வரலாறு.காம் தளத்திலோ பின்னூட்டம் இட்டால், மிகவும் மகிழ்வோம்.

வழக்கம்போல் என்றும் உங்கள் ஆதரவைக் கோரும்
ஆசிரியர் குழு