Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் 
பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History: 31ம் இதழின் பிற கட்டுரைகள்

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History

வரலாற்று ஆய்வாளர்களாக ஆக விரும்புபவர்கள் கற்றுக்கொள்ளும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி!

Wednesday, January 24, 2007

31ம் இதழின் பிற கட்டுரைகள்

கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக இவ்வலைப்பூவைப் புதுப்பிக்க இயலவில்லை. இடையில் வெளிவந்த இதழ்களின் கட்டுரைகளை இணையத்தளத்தில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தற்போது நாங்கள் ஈடுபட்டுவரும் சீரிய பணியான ஐராவதியின் ஒரு பகுதியாக இந்த மாதம் இடம்பெற்றிருக்கும் திரு.ஐராவதம் மகாதேவனின் கட்டுரை சங்ககாலத் தமிழகத்தில் முதல் அறிவொளி இயக்கம்.

25 ஆண்டுகளைக் கடந்து பல இளம் ஆய்வாளர்களை உருவாக்கி வரும் திருச்சிராப்பள்ளி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வரலாற்றைப் பதியும் முயற்சியில் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களின் மூன்றாவது அத்தியாயம்.

மூவேந்தர்களில் சோழர்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தாலும், மூவேந்தர்களின் கோயில்களுக்கும் வரலாறு.காம் குழுவினர் கடந்த மாதம் மேற்கொண்ட பயணத்தின் கட்டுரை.

முனைவர் இரா.கலைக்கோவனும் முனைவர் மு.நளினியும் தற்போது எழுதிவரும் பாண்டியர் குடைவரைகள் என்ற நூலுக்காக மேற்கொண்ட ஆய்வுப்பயணத்தின்போது இடம்பெற்ற அரளிப்பட்டி குடைவரையைப் பற்றிய அறிமுகம்.

பிசாசை முருங்கை மரத்தின் மீது ஏற விட்டுவிடாமல், அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தாலும், கதையைத் தொடரும் கோகுலின் பைசாசம்.

சங்க இலக்கியங்கள் கடந்த காலத்துடனும் (மாமல்லைச் சிற்பங்கள்) தொடர்புடையவை, நிகழ்காலத்துடனும் (குழந்தைப்பலி, கொடுவெறி இன்பம் - Sadism) தொடர்புடையவை என்பதை நிரூபிக்கும் சங்கச்சாரல்.

தங்களின் கருத்துக்களை எதிர்நோக்கியிருக்கும்
ஆசிரியர் குழு,
வரலாறு.காம்

0 Comments:

Post a Comment

<< Home